Tuesday 3 December 2019

சிறந்த 100 புத்தகங்கள்

சி சரவணகார்த்திகேயன் தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள 100 புத்தகங்கள்

தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம்.
  1. திருக்குறள் - மு.வ. உரை
  2. பட்டினத்தார் பாடல்கள்
  3. பாரதியார் கவிதைகள்
  4. பாரதிதாசன் கவிதைகள்
  5. கண்ணதாசன் கவிதைகள்
  6. வைரமுத்து கவிதைகள்
  7. சுந்தர ராமசாமி கவிதைகள்
  8. கலாப்ரியா கவிதைகள்
  9. கல்யாண்ஜி கவிதைகள்
  10. அசோகமித்திரன் கட்டுரைகள்
  11. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  12. லா.ச.ரா. சிறுகதைகள்
  13. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
  14. ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
  15. அ.முத்துலிங்கம் கதைகள்
  16. ஜெயமோகன் சிறுகதைகள்
  17. அம்பை சிறுகதைகள்
  18. ஆதவன் சிறுகதைகள்
  19. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
  20. பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்
  21. ஜெயமோகன் குறுநாவல்கள்
  22. சுஜாதாவின் நாடகங்கள்
  23. சுஜாதாவின் மர்மக்கதைகள்
  24. நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன்
  25. விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா
  26. ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா
  27. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா
  28. பீக்கதைகள் - பெருமாள்முருகன்
  29. விசும்பு - ஜெயமோகன்
  30. என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா
  31. சித்தன் போக்கு - பிரபஞ்சன்
  32. பொன்னியின் செல்வன் - கல்கி
  33. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
  34. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
  35. பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
  36. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
  37. ஏழாவது உல‌கம் - ஜெயமோகன்
  38. ராஸ‌லீலா - சாரு நிவேதிதா
  39. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
  40. புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
  41. சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ்கெளதமன்
  42. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
  43. கங்கணம் - பெருமாள்முருகன்
  44. தேரோடும் வீதி - நீல.பத்மநாபன்
  45. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
  46. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
  47. மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்
  48. உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்
  49. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
  50. ஆஸ்பத்திரி - சுதேசமித்திரன்
  51. காக்டெய்ல் - சுதேசமித்திரன்
  52. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் - எம்.ஜி.சுரேஷ்
  53. இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
  54. ஆதலினாற் காதல் செய்வீர் - சுஜாதா
  55. இனியெல்லாம் சுகமே - பாலகுமாரன்
  56. கண்மணி கமலாவிற்கு... - புதுமைப்பித்தன்
  57. சிந்தாநதி / பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்
  58. ஆளுமைகள் விமர்சன‌ங்கள் - சுந்தர ராமசாமி
  59. இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி
  60. நினைவோடை - சுந்தர ராமசாமி
  61. அங்க இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்
  62. கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
  63. இலக்கிய முன்னோடிகள் வரிசை - ஜெயமோகன்
  64. சு.ரா. நினைவின் நதியில் - ஜெயமோகன்
  65. சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
  66. துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
  67. கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
  68. தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
  69. கேள்விக்குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
  70. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
  71. கற்றதும் பெற்றதும் - சுஜாதா
  72. ஏன்? எதற்கு? எப்படி? - சுஜாதா
  73. திரைக்கதை எழுதுவது எப்படி? - சுஜாதா
  74. யாருக்கு யார் எழுதுவது? - இளையராஜா
  75. ஓ பக்கங்கள் - ஞானி
  76. தெருவோரக் குறிப்புகள் - பாமரன்
  77. குமரி நில நீட்சி - சு.கி.ஜெயகரன்
  78. சுபமங்களா நேர்காணல்கள் - கோமல் சுவாமிநாதன் & இளையபாரதி
  79. கொங்குதேர் வாழ்க்கை (பாகம் - 1, 1அ, 2)
  80. கவிதை மழை - கலைஞ‌ர் மு.கருணாநிதி
  81. அவதார புருஷன் - வாலி
  82. பாண்டவர் பூமி - வாலி
  83. கிருஷ்ண விஜயம் - வாலி
  84. காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
  85. தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - விக்ரமாதித்யன்
  86. அகி - முகுந்த் நாகராஜன்
  87. பித்தன் - அப்துல் ரகுமான்
  88. கருவறை வாசனை - கனிமொழி
  89. துப்பறியும் சாம்பு - தேவன்
  90. வால்கள் - ராஜேந்திர குமார்
  91. பாலகாண்டம் - நா.முத்துக்குமார்
  92. வந்தார்கள் வென்றார்கள் - மதன்
  93. உயிர் - டாக்டர். நாராயணமூர்த்தி
  94. உறவுகள் - டாக்டர் ருத்ரன்
  95. பிரம்ம ரகசியம் - ர.சு. நல்லபெருமாள்
  96. சத்திய சோதனை - மகாத்மா காந்தி
  97. வாரணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்
  98. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப்பிள்ளை
  99. நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்
  100. நூறு பேர் - மணவை முஸ்த‌ஃபா
பின்குறிப்புகள்:
  1. இது முழுக்க முழுக்க கறாரான, என் சொந்த ரசனை சார்ந்த பட்டியல்.
  2. புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அதன் தர வரிசைக்கிரமத்தைக் குறிப்பதல்ல.
  3. இது முழுமையான அல்லது இறுதியான ஒரு பட்டியல் அல்ல. என்னிடம் இருந்தும், இன்னும் படிக்கப்படாமல் - ஆனால் இந்தப்பட்டியலில் சேரத் தகுதியுள்ளவையாய் நான் நம்பும் - சில புத்தகங்கள் உள்ளன (உதா: மெளனி சிறுகதைகள், பிரமிள் கவிதைகள், மு.தளையசிங்கம் படைப்புகள், புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம், ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - சி.புஸ்பராஜா). என்னிடம் இல்லாமல், நான் படிக்காமலும் போன சில நல்ல புத்தகங்களும் உண்டு (உதா: ந.பிச்சமூர்த்தி கவிதைகள், ஆத்மநாம் கவிதைகள், இந்திரா பார்த்தசாரதி நாடக‌ங்கள், இரா.முருகன் சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்). மேலும் சில புத்தகங்கள், நான் படித்தும், என்னிடம் இல்லாததால், ஞாபகமறதியால் இதில் விடுபட்டிருக்கலாம். இந்தப் புத்தகக்காட்சிக்கு புதிதாய் வரும் புத்தகங்கள் சிலவும் இப்பட்டியலை மாற்றக்கூடும். எல்லாவற்றையும் விட, நூறு என்ற எண்ணிக்கை ஒருவகையில் too small; இன்னொரு வகையில் too big.

No comments:

Post a Comment