Friday 24 February 2017

மாமா வருவாரா?

என் செல்வராஜ்



       அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்பேருந்து வசதி என்பது அரிதான காலம்.   மாமா ஊர் உடையார் பாளையம் அருகில் பெரிய கிராமம். என்  ஊரில் இருந்து சில மைல்களுக்கு அப்பால்      இருக்கும் பெரிய ஊரான பாளையங்கோட்டையிலிருந்து தான் பேருந்து வசதி. ஊருக்குள் மூன்று ஆர்ட்டீசியன்  நீரூற்றுகள். எப்போதும் தண்ணீர் தானாகவே   கொட்டிக்  கொண்டிருக்கும். போர்வெல்  போட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிறதுவயல்வெளியில்  தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் முப்போகம் நெல் விளைந்தது. கரும்பு, வாழைகூட சிலர் பயிரிட்டு எங்கும் பச்சைப் பசேலென   செழித்துக் கிடந்தது. . வீட்டில் காலையில் கேழ்வரகு, கம்மங்கூழ் உணவு . அரிசி சாப்பாடு மதியமும் இரவும்தான்வயலில் வேலை செய்பவர்களுக்கும் அது தான். மதியம் மட்டும் சாதம் வடித்து சாம்பார் அல்லது புளிக்குழம்புடன் சோறு
      என்னுடைய தாய் மாமா எப்போதெல்லாம் எங்கள்  வீட்டுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம்  கொண்டாட்டம் தான் . தின்பதற்கு தின்பண்டங்கள் ஏராளமாக வாங்கி வருவார்.   எப்போது அவர் வந்தாலும் வீட்டில்  தடபுடலாக விருந்து நடக்கும். அப்பா சிறியதாக வியாபாரம் செய்து வந்ததால் பணத்துக்கு   ஓரளவு பிரச்சினை இல்லை.  மாமா வீட்டுக்கு வந்ததும் என்னை தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சுவார். அவரது தங்கைக்குப் பிறந்த  ஒரே மகன் அல்லவா?. வீட்டுக்கு வரும்போதெல்லாம்  ஊரில் விளையும் வரகு, மணிலா கொட்டை அன்றைக்குக் கிடைக்கும்  காய்கறி   போன்றவையும் கூடவே வரும்மாமா கிராமம் பெரியது. செம்மண் பூமி. எங்கு பார்த்தாலும்   வறண்டு கிடக்கும். சில இடங்களில் ஏரிகள் இருந்தன. ஏரிப்பாசனத்தில்  அருகில் உள்ள நிலங்களில் விவசாயம் செழித்து இருந்தது.  மற்ற வயல்களிளெல்லாம்  மானாவாரிப் பயிர்களே.    

       பள்ளியில் விடுமுறை விட்டிருந்தார்கள். மாமா வீட்டிற்குப் போக எனக்கு ஆசை அம்மா....அம்மா...”’என்றேன் இழுத்தபடியே . ”என்ன ’’ஒரே வார்த்தையில் கேள்வி வந்தது அம்மாவிடமிருந்து “..மாமா ஊருக்குப் போகலாம்மா?”’  கொஞ்சம் கொஞ்சியபடியே  கேட்டேன்“அப்பா  வரட்டும் கேட்டுச் சொல்றேன்” சொல்லிவிட்டு அவர் வேலையில் கவனமானார்நல்ல வேளையாக அப்பா    ஒத்துக்கொண்டார். மறுநாளே என்னை அழைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றார் அம்மா. உடையார் பாளையம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து சாலை வழியே நான்கு மைல் நடந்து செல்லவேண்டும். மாமாவை பார்க்கப்போகிறேன் என்ற எண்ணம் மகிழ்ச்சியைத் தந்ததால் நடப்பது அவ்வளவு கஷ்டமாக தெரியவில்லை. அம்மாவுக்கு தொந்திரவு தரக்கூடாது என்று நடந்தே சென்றேன். அந்த சாலையில் பேருந்து ஏதும்  கிடையாது. எப்போதாவது மாட்டு வண்டி செல்லும். சில பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே கூண்டு வண்டி இருக்கும். அதில் எங்களுக்கு இடம் கிடைக்காது.
      அப்போது அந்த சாலையில் தூரத்தில்   மாட்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சலங்கைகளின் ஒலி காதுக்கு ரம்மியமாக இருந்தது. காளைகளின் காலடிப் புழுதியின் வாசனை மூக்கில் நுழைந்து ஒருவித இன்பத்தைக் கொடுத்தது. மானாவாரிப் பயிருக்காக் எப்போதும் உழுது கிடக்கும் வயல்வெளி மண்ணின் வாசனையும், லேசாக மழை தூறியபின் பரவும் மண் வாசனையும் நான் ரசித்து நுகர்ந்தேன்எங்கள் அருகில் வண்டி  வந்ததும் நின்றது. ஓட்டி வந்தவர்   அம்மாவின் உறவினர்.   "மாரியாயி... என்னாம்மா நல்லா இருக்கியா? வா வண்டியில வந்து ஏறிக்க.”என்று அழைத்தவரிடம் “’நல்லாருக்கண்ணே நீங்க நல்லா இருக்கீங்களா?”என்று சொன்னபடியே . என்னைத் தூக்கி வண்டியில் ஏற்றி விட்டுபிறகு அவரும் ஏறிக்கொண்டார். வண்டி மெல்ல நகர்ந்தது.

             வண்டி  மாமாவின் வீட்டின் முன் நின்றது, நாங்கள் இறங்கிக் கொண்டோம்.. அந்த காலத்து ஓட்டு வீடு. மாமாவின்  அப்பா கட்டியது. நிலைக்கதவை அடுத்து நீளமான தாழ்வாரம்.தாழ்வாரத்தை ஒட்டி எதிரும் புதிருமாக இரண்டு அறைகள்பின்பக்கக் கதவைத் திறந்தால் பெரிய தோட்டம். தென்னை, மா,தேக்கு,புளி என்று மரங்கள் அடர்ந்திருக்கும். ஆண்டுக்குத் தேவையான புளி,தேங்காய்,மாங்காய் என்று மாமா கொண்டுவந்து கொடுத்துவிடுவார். வரகு , கம்பு விளையும்  காலங்களில் அவைகளும் தேவைக்கு அதிகமாகவே வந்துவிடும்.

      வீட்டின் முன் வண்டி நிற்பதைப் பார்த்த அம்மாயி வெளியில் வந்தார்நாங்கள் வருவதை அறியாத அம்மாயிக்கு எங்களைக் கண்டதும் வியப்பும் மகிழ்ச்சியும் தொற்றிக் கொண்டது. ஒடி வந்து என்னைத் தூக்கிக் கொண்டார்.அம்மாயியின் பரிசம் எனக்குள் ஆனந்தப் பரவசத்தை ஏற்படுத்தி இருந்தது.. அதற்குள்  மாமாவும் வந்து விட்டார். அம்மாயியிடமிருந்து மாமா தோளுக்குத் தாவினேன். என்னைக் கண்ட மகிழ்ச்சி அவர் கண்களில் தெரிந்தது.”ஏம்மா....வள்ளிய அழச்சிகிட்டு வரல?” இல்லண்ணா அவளும் வந்துட்டா அங்க மாடு கன்ன யாரு பாக்கறது?அவுங்க அப்பாவ யாரு கவனிக்கறது?அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாமா என்னை அழைத்துக்கொண்டு தெருவில் நடந்தார். “ஏங்க...புள்ள இப்பதான் வந்திருக்கான் அதுக்குள்ள எங்க அழச்சிகிட்டுக் கிளம்பிட்டீங்க?” “இருடி...நானும் மாப்பிள்ளையும் ஒரு ரவுண்டு ஊர சுத்திட்டு வர்றோம்” என்ற மாமாவிடம் “ஆமாம் இனிமே மாப்பிள்ளையும் உங்க தோள உட்டு இறங்க மாட்டான்.நீங்களும் இறக்கமாட்டீங்க” சிரித்துக் கொண்டே சொன்னார் அத்தை.
      மாமாவுக்கு ஆண் குழந்தை கிடையாது. அதனால்தானோ என்னவோ என்னையே அவர் மகனாக நினைத்தார். எனக்கும் மாமாவோடு இருக்கும் நேரமே மகிழ்ச்சியானதாக இருந்தது. உறங்கும் நேரத்தைத்தவிர மற்ற நேரங்களில் மாமாவோடுதான் இருப்பேன். சில நேரங்களில் தெருப் பசங்களோடு விளையாடப் போவதுண்டு.அப்போதும்கூட பயந்து பயந்து அனுப்புவார். மாமாவோடு தெருவை நோட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்தேன். மேலத்தெருவை அடைந்த போதுதான் “என்ணன்ணே....மாப்பிள எப்ப வந்தான்.?” குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்பினோம். கடைசி வீட்டு கோதண்டம் ஆட்டுக்குத் தழையை மேலே கட்டிக்கொண்டே கேட்டார்.  “”இப்பதான் வந்தான்..தங்கச்சியும் வந்திருக்கு”’ என்ற மாமாவுடன்  குளக்கரையைத் தாண்டி நடந்து கொண்டிருந்தேன்.இந்த குளத்தில்தான் மாமா எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தார்.   
      நான் பார்த்தவரையிலும் எல்லா வீடுகளிலும் கல் உரல் இருந்தது. எங்கள்  கிராமத்தில் அவ்வளவு அதிகமாக கல்லுரலை  பார்த்ததில்லை. வீட்டில் மர உரல் தான்.   மாமா ஊரில் வீட்டுக்கு வீடு கல்லுரல் இருந்தது. எங்கு பார்த்தாலும் இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை வரகு, கம்பு போன்றவற்றை குத்திக்கொண்டிருந்தார்கள்.அப்படிக் குத்தும்போது அவர்கள் ஆயாசம் தெரியாமல் இருக்க “”க்கும்,க்கும்”என்று ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலி எனக்கு எப்போதும் பிடித்தமானது. தெருவிலும் தோட்டத்திலும் மணிலா கொட்டையைக் காயவைத்திருந்தார்கள். மாமா ஒரு கை மணிலாக் கொட்டயை எடுத்து  கையில் கொடுத்தார். ஊரின்  கோடியில்  செக்கு இருந்தது. மாமா என்னை அங்கே அழைத்துப் போனார். செக்கு மாடு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது . செட்டியார் செக்கருகே நின்றிருந்தார்மரத்தாலான செக்கின் அடியில் எண்ணெய் வழிந்து கொண்டிருந்ததுஎள்ளை  ஆட்டிக்கொண்டிருந்தார்கள். மாமா  கொஞ்சமாக அரைக்கப்பட்ட எள்ளைக் கையில் எடுத்து வந்தார். பக்கத்தில் இருந்த  மளிகைக் கடையில் கொஞ்சம் நாட்டு வெல்லம் வாங்கி  பாதி அரைபட்ட எள்ளுடன் கலந்து கொடுத்தார். என்ன அருமையான சுவை.!  இன்னும் திண்ண வேண்டும் என்று  ஏங்க வைத்ததுஅங்கிருந்து நான் மட்டும் மாமாவிடம் சொல்லிவிட்டு முருகன் கோவிலுக்கு சென்றேன்.
      அந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்கோவிலுக்குச் சென்று முருகனை வணங்கிவிட்டு வீட்டுக்கு  வந்தேன். அம்மாயி  அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.   " ஆத்தா மாரியாயி எனக்கு வயசாயிட்டே போவுதுமா...இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல எப்போ  சாவு வரும்னு  தெரியல. எம் பேர்ல இருக்கிற சொத்து உனக்குத்தான் . உன் ஊட்டுகாரர்கிட்ட  கிட்ட சொல்லி எழுதி வாங்கிக்கச் சொல்லு அம்மாயியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.   " போ ஆத்தா, அவருக்கு உன் சொத்தை எழுதி வாங்க விருப்பமில்ல. என் அண்ணன் இருக்கும்போது அந்த சொத்து எனக்கெதுக்கு என்கிறார் என்ற அம்மாவிடம் " என்னடி சொல்றே ? அவன் ஒன்னும் உங்கூடப் பொறந்தவன் இல்ல. என் மூத்தாளுக்குப் பொறந்தவன் தான. எஞ்சொத்த  நான் தரேன் .ஏன் வாங்கிக்க மாட்டேங்கிற ?அம்மாயி லேசான கோபத்தோடு கேட்டார்.   " ஆத்தா.... அவுரு என் கூட பொறக்கல தான். ஆனா எம்மேலேயும்,எம் புள்ளயோ மேலேயும் மச்சான் மேலேயும் காட்டுற அன்பப் பாத்தியா?சரி உன்ன கூட மாத்தாந்தாயி போலவா நடத்துறாரு...ஏன் உனக்கு புத்தி இப்படிப் போவுது?நீ செத்தீன்னா கொள்ளி வைக்கப் போறது அவருதான். பேசாம இரு. அவரும் என்  அப்பாவுக்குப் பொறந்தவருதான், அவரே உன் சொத்தை அனுபவிக்கட்டும். என் ஊட்டுக்காரரும் இத தான் சொல்றாரு " மீண்டும் அம்மா அம்மாயியிடம் கொஞ்சம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்.  இந்த உரையாடல்கள் எதுவும் எனக்கு  புரியவில்லை.

       ஒரு வாரம் போனதே தெரியவில்லை. திடீரென ஒரு நாள் எனக்கு ஜுரம். எல்லோருக்கும் கவலை. நான் படுக்கையில்  கிடந்தேன். அப்போதெல்லாம் பல கிராமங்களில்  நாட்டு வைத்தியம் தான். உடல்நிலை ரொம்ப மோசமானால் மட்டுமே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வார்கள். மாமா வைத்தியரை அழைத்து வந்தார். என்னை வெளியே வரச்சொல்லிச் சட்டையைக் கழற்றிப் பார்த்தார்.  முகம் மற்றும் உடலில் சிறு கொப்புளங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டுப் " பையனுக்கு அம்மை வாத்திருக்கு. சுத்த பத்தமா பார்த்துக்குங்க. ஒரு வாரத்தில சரியாயிடும் " என்று சொல்லிவிட்டுத் தாத்தா கொடுத்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்..
      என் அம்மாயி பாயைச் சுருட்டி வைத்து விட்டு வேப்பிலை போட்ட படுக்கையைத் தயார் செய்து படுக்க வைத்தார்.  " அம்மா.... எனக்கு என்னா வந்திருக்கு? "  ஒண்ணுமில்லய்யா. அம்மா மாரியாத்தா உன் ஒடம்புல வந்திருக்கா. நம்ம ஊரு அம்மனுக்கு வேண்டியிருக்கேன்.ஆத்தா ஒன்ன உட்டு சீக்கிரம் எறங்கிடுவா சரியா..." .  அம்மா  சாமிகிட்ட  வேண்டிகிட்டா சரியாயிடுமா? என் சந்தேகத்தைக் கேட்டேன் உனக்கு ரெண்டு வயசு  உன் அப்பா உடம்புக்கு முடியாம படுத்துட்டாருஎல்லாரும் செத்துடுவாருன்னு சொன்னாங்க . நம்ம ஊரு பெரியவங்க  புருஷன் பொழைச்சி வந்தா தாலிய கழட்டி உண்டியல்ல போட்டுடறதா வேண்டிக்க , அம்மன் காப்பாத்துவா” அப்படீன்னாங்க. நானும் அப்படியே அம்மன் கோயிலுக்கு போயி வேண்டிகிட்டேன். உங்கப்பா பொழைச்சி வந்துட்டாரு. நானும் வேண்டிகிட்ட மாதிரி பவுனில் செய்த அந்த தாலியை உங்க அப்பாவோட போயி அம்மன் உண்டியல்ல போட்டுட்டேன். அதால தான் சொல்றேன் அம்மன் சக்தி உள்ள சாமின்னு. நீ நிம்மதியா இரு கண்ணு " என்றார். பக்கத்து வீட்டு கற்பகம்  அக்கா  மாரியம்மன் தாலாட்டை தினமும் படித்தது.ஒரு வாரத்தில் அம்மை இறங்க ஆரம்பித்தது.
      எனக்கு சாமி மேல் அதிக நம்பிக்கை வந்தது. நான் சாமியை வேண்டிக்கிட்டா எல்லாம் நல்லதா நடக்கும் என நம்ப ஆரம்பித்தேன்.அம்மை இறங்கியதும் தலைக்கு தண்ணீர் ஊற்றினார்கள்ஊருக்குப் போவது என  முடிவு செய்து தன் அண்ணனிடம் கேட்டார் அம்மா.. “’ஏம்மா  இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போயேன்”  என்றார் மாமா.    மாமா எனக்குப்  பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுட்டாங்க போயே ஆகணும்” என்றேன் . சரி நாளக்கி காலையில புறப்படலாம்” என்றவர். மறுநாள் காலையில்  என்னை தூக்கிக்கொண்டு வயல்வெளி வழியே ஒத்தையடிப் பாதையில் நடந்தார்அம்மா உடன் வர ஒத்தையடிப்பாதை நீண்டு கொண்டே சென்றது. வயல்களுக்கு இடையே நான்கு அடி அகலப்பாதை. போகும் வழி எங்கும் உயிர் வேலி அமைத்தது போலிருந்தது. ஜெயங்கொண்டம் வந்து சேர்ந்து எங்களைப் பேருந்தில்  ஏற்றி விட்டார் மாமா. நாங்கள்  ஊருக்கு வந்து சேர்ந்தோம்

      அடுத்த ஆண்டே என் அம்மாயி இறந்து விட்டார். அவரது சொத்துக்களை என் அம்மாவும் அப்பாவும் வேண்டாம் என்று மறுத்து விட்டதால் மாமாவே அனுபவித்துக் கொண்டிருந்தார். மாமா தன்  மகளுக்குத் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி  வைத்தார் அதில்  குடும்பக்கடன் அதிகமாகிவிட்டதுஅம்மாயியின் சொத்தில் கொஞ்சம் விற்றுவிட்டுக் கடனை அடைக்க விரும்பினார்.  அம்மாவிடம் கேட்டார் மாமாஅம்மாவோ “ஏண்ணா அது  உங்களுக்குன்னு  விட்ட பிறகு  எனக்கு ஏது உரிமை. உங்கள் கடனை அடைக்க தாராளமாக விற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார். இருந்தாலும் கேட்காமல்  விற்பது சரியல்ல. மச்சான் வரட்டும் அவரை ஒரு வார்த்த கேட்டுட்டு முடிவு செய்யலாம்” என்றார் மாமாஅப்பா இரவு வருவதற்கு நேரமாகி விட்டது. அதனால் அன்று எதுவும் கேட்காமல் மாமா படுத்துவிட்டார். மறுநாள் காலையில் அப்பா எழுந்ததும் வயலுக்கு சென்றுவிட்டார். வயலைச் சுற்றிப் பார்த்து விட்டு அப்பா வீட்டுக்கு வந்தார்மாமா பேச்சை ஆரம்பித்தார். "மச்சான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் " . சொல்லுங்க”  ஒண்ணுமில்ல கடன் கொஞ்சம் அதிகமா போச்சு. வட்டிக்காரன் பத்து வட்டி கேக்குறான் ,வட்டி கொடுத்துத் தீராது போலருக்கு, அதான் அம்மா பேர்ல இருக்கிற  நிலத்தில கொஞ்சத்தை வித்துட்டு கடன அடைக்கலாம்னு நெனைக்கிறன் ". அதுக்கு என்ன எதுக்கு கேக்கறீங்க ? அம்மா நிலம் முறையா என் தங்கச்சிக்குத்தான் சேரனும். எங்கிட்ட நீங்க உட்டிட்டீங்க. இருந்தாலும் ஒங்கள கேக்காம விக்க எனக்கு மனசு வரல”  அப்படியெல்லாம் நீங்க சொல்லப்படாது. நிலம் எங்களுக்கு வேணாம்னு சொன்னப்பவே அது ஒங்க சொத்து. அதை விக்காம கடன் அடையாதுன்னா வித்துகிங்க”  சரி  மச்சான்”  சொல்லிவிட்டு  ஊருக்கு கிளம்பினார்அம்மாவும் அப்பாவும் அவரை வழி அனுப்பி வைத்தார்கள்.

        நான் மாமாவை இன்னும் கொஞ்ச நாள் தங்கச் சொல்லிக் கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே அப்புறமா வரேன்””.. என்று சொல்லி என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புறப்பட்டார். சென்றார். சில மாதங்கள் கழித்து அப்பாவுக்கு ஒரு கடிதம் வந்தது. மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று எழுதி இருந்தார்கள். என்னை வீட்டில் விட்டு விட்டு என் அப்பாவும் அம்மாவும் உடனே புறப்பட்டு சென்றார்கள். என் அக்காள் தான்  என்னைப்  பார்த்துக்கொண்டார். மாமாவுக்கு உடல்நலம் சரியான பிறகே அப்பாவும்,அம்மாவும் வீட்டிற்கு வந்தார்கள். என் அக்காவுக்கு படிப்பு வரவில்லை அதனால்  ஐந்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டார்கள். எனக்கு படிப்பு நன்றாக வந்ததால் அப்பா என்னைப் பக்கத்து ஊரில் உள்ள உயர் நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார். தினமும் நடந்துதான் மூன்று மைல் தூரம் போகவேண்டும். வயல் வரப்பு வழியே நடந்து சென்றால் மலைப்பு தெரியாது.என் வகுப்பு தோழர்களுடன் பெரும்பாலும் வயல் வரப்பு வழியேயும் , சில சமயங்களில்  மெயின் ரோடு வழியாகவும் செல்வோம்.      நான் நடந்து செல்லும் போது ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே செல்வேன். போகும் வழியில் உள்ள ஊரின் கோவிலுக்கு தினம் சென்று சாமி கும்பிட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.என் அப்பா தீவிர கடவுள் பக்தர்திருப்பதி வெங்கடாசாலபதிதான் அவருக்குப் பிடித்தமான தெய்வம்.  புரட்டாசி மாதம்  சனிக்கிழமை விரதமெல்லாம் இருப்பார்.   என் பெற்றோர்களிடமிருந்து எனக்கு பக்தி வந்துவிட்டது. கோயிலுக்குப் போனால் கும்பிடுவேன்..கடவுளிடம் எப்போதும் எல்லோரையும் நன்றாக வை என்று வேண்டுவேன்.கடவுள் நான் வேண்டுவதாலேயே எனது வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என நம்பினேன். பெரிய எழுத்து பஞ்ச பாண்டவர் வனவாசம் என்ற புத்தகத்தை எனது அத்தையிடமிருந்து வாங்கி வந்து படித்துக்கொண்டிருந்தேன்இரவு நேரத்திலும் மண்ணெண்ணெய் விளக்கில் படித்துக்கொண்டிருந்தபடியே தூங்கிவிட்டேன். விளக்கு சாய்ந்து  நெருப்புப் பட்டு  புத்தகம் கருகத் தொடங்கியிருந்தது. கருகும் வாசனையை நுகர்ந்த என் அப்பா ஓடி வந்து புத்தகத்தை எடுத்து தீயை அணைத்தார். என்னை ஓங்கி ஒரு அடி அடித்தார். நான் எழுந்து என்ன நடந்தது என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன்.அப்புறம் தான் புத்தகத்தைப் பார்த்தேன். அது கருகியிருந்ததை கண்டதும் அழ ஆரம்பித்துவிட்டேன். எரிந்துபோன புத்தகத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்பதே என் கவலை. அப்பாவிடம் வேறு புத்தகம் வாங்கித்தர  கேட்டேன். அவரும் சிதம்பரத்தில் கிடைக்கும் வாங்கித் தருகிறேன் என்றார்

     அதிகாலையில் வாசல்கதவு தட்டப்பட்டது. யார்’ எனக் கேட்டபடி அம்மா கதவைத் திறந்தார். என் மாமாவின் ஊரில் இருந்து அம்மாவின் சொந்தக்காரர் வந்திருந்தார். அம்மா  என்ன திடீரென்று வந்திருக்கீங்க?எதாவது விஷேஷமா?” எனக் கேட்டார். வந்தவர் வாயில் துணியை பொத்திக்கொண்டே உன் அண்ணன் செத்துட்டாரும்மா”  என்றார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவர்  கன்னத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.அதைக்கேட்ட அம்மா அடுத்த நிமிடமே பெருங்குரலெடுத்து அண்ணா.. அண்ணா” என்று  அலற ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா வந்தார். செய்தியைக் கேட்டு கண்கலங்கினார். பிறகு என் அம்மாவைத்  தேற்றினார். அம்மா அழுகை அதிகமானது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் ஓடி வந்தனர். செய்தியைக் கேள்விப்பட்டு செய்தி சொல்ல வந்தவரிடம் எப்ப எடுக்கிறாங்க?” என்று கேட்டனர். என் அம்மாவும் எங்கள் சொந்தக்காரர்களும் உடனே என் மாமா ஊருக்கு புறப்பட்டனர்.
 மாமாவுக்கு என்ன ஆச்சிம்மா?  கேட்ட என்னைப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார் அம்மா. "உன் மாமன் செத்துப்போயிட்டாருடா தங்கம் ... அவரு மடியிலே உக்காரவச்சி உனக்குக் காது குத்தலாம்னு இருந்தேன். அதுகூட இப்போ முடியாம போச்சே”  தலையில் அடித்துக்கொண்டு அழுதார்மாமா பொழைச்சுக்குவார் என நான் நம்பினேன். அம்மா நான் சாமிகிட்ட வேண்டிக்கிறன் . மாமா  பொழச்சிக்குவார் பாரு என்று சொல்லிவிட்டு சாமியிடம் வேண்ட ஆரம்பித்தேன். கடவுளே, என் மாமா உயிர் பொழச்சு வரணும். என் அம்மா அழக்கூடாது என வேண்டிக்கொண்டே இருந்தேன். அக்கா மட்டுமே என்னுடன் வீட்டில் இருந்தார்
" அக்கா, மாமா பொழச்சிப்பாரா?
“ எனக்கென்ன தெரியும். நீ சாமியை வேண்டிக்கோ. எழுந்து வந்தாலும் வரலாம்" அக்காவின் பதில் எனக்கு நம்பிக்கை அளித்ததுமூன்று நாட்கள் விடாமல் சாமியை வேண்டிக்கொண்டிருந்தேன். சாமி நிச்சயம் என் மாமாவை திரும்ப கொடுத்துவிடும் என நம்பினேன். மூன்று நாள் கழித்து என் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வந்தார்கள். உடனே என் அம்மாவிடம் ஓடினேன்.
 "அம்மா. மாமா பொழைச்சிட்டாரா?"  அம்மா ஒன்றும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தார்.என்னருகில் வந்த அப்பா " சுந்தரம் செத்தவங்க எப்பவும் திரும்ப பொழைக்க மாட்டாங்க "   இல்லேப்பா, சாமிகிட்ட வேண்டிகிட்டா அந்த சாமி அவரை உயிரோட கொடுக்காதா ?".  "அப்படி எல்லாம் நடக்காது. சும்மா அப்படி சொல்வாங்க. செத்தா செத்ததுதான், உன் மாமா சாமிகிட்ட போயிட்டார், அழாமல் இரு"
 அப்ப மாமா திரும்ப வரலியா  அப்பா? .
 இனிமே வரமாட்டார் சுந்தரம், நீ அழக்கூடாது”  
கடவுள் மீது எனக்கிருந்த நம்பிக்கை உடைந்து கொண்டிருந்தது.முதன் முறையாக கண்ணில் கண்ணீர் என் மாமாவை நினைத்து.   அப்பா அப்ப சாமியை வேண்டிகிட்டா ஒன்னும் நடக்காதா. அப்படின்னா  அது சாமி இல்லேப்பா. அந்த சாமி எனக்கு இனி வேண்டாம்பா என்று  கதறி அழுதேன்.


Email : enselvaraju@ gmail.com

Wednesday 15 February 2017

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2



என்.செல்வராஜ்

    சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1  கட்டுரையில்  எஸ் ராமகிருஷ்ணன்,
 வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு பற்றியும் , ஜெயமோகன் பரிந்துரை பட்டியலையும், சாகித்ய  அக்காடமி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும் , என் பி டி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும்  கீரனூர் ஜாகிர் ராஜாவின் பரிந்துரைகளையும்  பார்த்தோம். காவ்யா பதிப்பகம் பல தமிழ் சிறுகதைகளின்  தொகுப்புக்களை சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.

இந்த கட்டுரையில் மிக முக்கிய தொகுப்பான கதைக்கோவை -1 முதல் 4 தொகுதிகளையும் , இ எஸ் டி தொகுத்த  தலை வாழை, ஒரு நந்தவனத் தென்றல் , காவ்யா வெளியிட்டுள்ள நெல்லைச்சிறுகதைகள், தஞ்சைச்சிறுகதைகள்,
கொங்குச்சிறுகதைகள், சென்னைச்சிறுகதைகள், தில்லிச்சிறுகதைகள், பெங்களுர் சிறுகதைகள், எஸ் ஷங்கரநாராயணன்  தொகுத்த ஆகாயப்பந்தல், பரிவாரம், இந்த நூற்றாண்டு சிறுகதைகள்  பாகம்-1, பாகம் 2, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, மணிக்கதைகள் 1-6, சிவசங்கரி தொகுத்த நெஞ்சில் நிற்பவை 1,2,  கி ராஜநாராயணன் தொகுத்த கரிசல் கதைகள், அன்பாதவன் தொகுத்த மும்பை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில்   உள்ள கதைகளைக் காணலாம்.
                
 நெல்லைச் சிறுகதைகள் என்ற தொகுப்பை  சு சண்முகசுந்தரம் தொகுத்து காவ்யா பதிப்பகம்  வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 50  எழுத்தாளர்களின்         சிறந்த கதைகளை தொகுத்துள்ளார். இந்த தொகுப்பு  மே 2000 ல் வெளிவந்து 2011 ல் இரண்டாம் பதிப்பு  வெளியானது. இந்த  தொகுப்பில் உள்ள கதைகள்
                
    1. பாரதியார்  -   காக்காய் பார்லிமெண்ட் 2. .மாதவய்யா 
                    ஏணியேற்ற நிலையம்
    3. புதுமைப்பித்தன் -  கயிற்றரவு     4. கு அழகிரிசாமி  - சுயரூபம்
    5. தொ மு சி ரகுநாதன் -  ஆனைத்தீ 6. வல்லிக்கண்ணன் - தீ வேலி
    7. கி ராஜநாராயணன் -- கன்னிமை 8. பா செயப்பிரகாசம் -  அம்பலகாரர் வீடு
    9. பூமணி-   முழுக்கு             10. எஸ்தர்  -  வண்ணநிலவன்
    11. வண்ணதாசன்   - தனுமை    12. டி செல்வராஜ்   - உண்ணாம திண்ணாம
    13. சு சமுத்திரம் - மானுடத்தின் நாணயங்கள்  14. மாலன்   -  23
    15. வீரவேலுச்சாமி-  பங்கீடுகள்   16. காஸ்யபன் - ஜகதா
    17. போப்பு-  இடைவெளி   18.தனுஷ்கோடி ராமசாமி - ஆயிரங்கண்ணுடையாள்
    19. செ. ஞானன்  -- நிதர்சனங்கள்   20. கொ மா கோதண்டம் -  பசித்தீ
    21. கோணங்கி  -  மதினிமார்கள் கதை 22. எஸ் ராமகிருஷ்ணன்
        தாவரங்களின் உரையாடல்    23. உமா கல்யாணி  -  முள்ளுக்கு முள்            
    24. மேலாண்மை  பொன்னுச்சாமி -  அரும்பு  25. ச தமிழ்ச்செல்வன்
       வெயிலோடு போய் 26. ஸில்வியா - கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்
    27. .முத்தானந்தம் -  மண்நேசம்  28. ..ஹெச்.கே.கோரி  --தீர்த்த யாத்திரை
    29. விக்ரமாதித்யன் -   காலம்      30. வித்யா ஷங்கர்  -  ராசகிளிகள்
    31. பாமா - அண்ணாச்சி             32. தமயந்தி  - அனல்மின் மனங்கள்
    33. சோ தருமன் -  நசுக்கம்         34. கௌரிசங்கர்-   தாக்கம்
    35. உதயசங்கர்- டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்
    36. மாதவராஜ்-  மண்குடம் 37.வெ. சுப்பிரமணிய பாரதி  - சிறகுகளும்
     சிறைகளும்  
   38. சுந்தரபாண்டியன் கல்லத்திமரம்   39. அபிமானி-  பாறைகள் 
     சிதறிப்போகும்       
   40. நெல்லை சு முத்து - லைக்கா    41. ஸ்ரீதர கணேசன் -ரசிகனைத் தேடி          
   42. பூமா ஈஸ்வரமூர்த்தி சரி        43. பா அமிழ்தன்  சந்தர்ப்பம்             
   44. அ பிரேமா  -  சிறை      45. கழனியூரன்  -  ஒரு கதை சொல்லியின் குரல்
   46. தாமரை செந்தூர் பாண்டி -அப்பொழுதுதான் அஞ்சலை சிரித்தாள்
   47. அழ கிருஷ்ணமூர்த்தி -  வறுமைச் சக்கரம்    48. களந்தை பீர் முகம்மது - 
      தயவு செய்து         49. டி குலசேகர்  - மனதில் ஒரு பிரார்த்தனை 
   50. தளவாய் சுந்தரம்  - சாவை அழைத்துக் கொண்டு வருபவள்


                 கொங்குச் சிறுகதைகள்  என்ற தொகுப்பின் தொகுப்பாசிரியர்  பெருமாள் முருகன். காவ்யா இந்த   தொகுப்பை   மே 2001 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு கொங்கு பகுதி எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை கொண்டிருக்கிறது.  இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள் .
                  
  1. தறிக்காரன்-  ஆர் சண்முகசுந்தரம்    2. சர்ஜன்  வாசுக்குட்டி  -  ராஜாஜி
  3. கூலிக்கார வீரப்பன் -  பெ தூரன் 4. கடவுளும் கறுப்பனும் -  கு சின்னப்ப பாரதி
  5. சின்னம்மிணி - திருப்பூர் கிருஷ்ணன்     6. சிலிர்ப்புகள் -  சி ஆர் ரவீந்திரன்
  7. தூண்டில்  -  சூர்யகாந்தன்               8. பந்து பொறுக்கி  - விட்டல் ராவ்
  9. ஒவ்வொறு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன் 
  10. கிறிஸ்துமஸிற்கு முந்தின தினங்கள்- கார்த்திகா  ராஜ்குமார் 
  11. தங்கப்பன் ஆசாரியின் கிளி -  சுகுமாரன்   12. இரண்டு பேர் -  ஆர் சிவகுமார்
  13. அடிவாழை  - ப கிருஷ்ணசாமி      14. மூங்கில் குருத்து   ---  திலீப்குமார்
  15. வதம்  -  திலகவதி                16. சொக்காச்சுமை  - க வை பழனிசாமி
  17.  அழிவு   -தேவி பாரதி             18. அழகு  -  இரவீந்திர பாரதி
  19. காசி  -  பாதசாரி                  20. அப்புச்சியும் பேரனும் -  கோவிந்தராஜ்
  21. கோடித்துணி - பெருமாள் முருகன்   22. மல்லி -  சூத்ரதாரி
  23. பூக்கள் பூக்கும் ஓசை  - ஷாராஜ்    24. ராக்கம்மா -  நஞ்சுண்டன்
  25. விடத்தலாமரம் -  சுதேசமித்திரன்    
  26. குற்றமும் தண்டணையும்  - ஜெ ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
  27. காளீ  -  அனுராதா                28. அக்கழுதை  -  கா சு வேலாயுதன்
  29. அன்னய்யா -  ஆதவன் தீட்சண்யா  30. முடிவு -  இந்திரா
  31. சண்முகசித்தாறு - க சீ சிவகுமார்   32. உருவாரம்    -  என் ஸ்ரீராம்
  33. மண்பூதம் -  வா மு கோமு




       தஞ்சை சிறுகதைகள் என்ற தொகுப்பை சோலை சுந்தரபெருமாள் தொகுத்து காவ்யா வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1999 ல் முதல் பதிப்பு வெளியானது. இதில் உள்ள சிறுகதைகள்
                  
    1. காசி வேங்கடரமணி  -  பட்டுவின் கல்யாணம்    2. கல்கி   -  ஜீவரசம்
    3. .ரா    -  வண்ணார வீரம்மாள்     4. தி ஜ ரங்கநாதன்    - பெட்டிவண்டி
    5. ந பிச்சமூர்த்தி  -   மாயமான்     6. கு ப ராஜகோபாலன் -    விடியுமா
    7. மௌனி -  குடும்பத்தேர்        8. க நா சுப்ரமணியம்   --  ஆடரங்கு
    9. ஆர் வெங்கட் ராமன்   -  தவிப்பு   10. தி ஜானகிராமன்   -  கோபுர விளக்கு
    11. ஆனை ஸு குஞ்சிதபாதம்  - தேவகியின் திருமணம்
    12. ஜெகசிற்பியன்  -  நரிக்குறத்தி   13. சுப்ரமணிய ராஜு  - இருட்டில் 
      நின்ற              
    14. கரிச்சான் குஞ்சு  - ரத்த சுவை  15. எம்.வி.வெங்கட் ராம்  -   
       பூமத்தியரேகை         
    16. மு கருணாநிதி  -  வாழமுடியாதவர்கள் 17. எழில் முதல்வன்  -
     அவள் நெஞ்சம்     18. பூவை எஸ் ஆறுமுகம் - மஞ்சிவிரட்டுப் பூரணி
    19. தி ச ராஜு       -  பட்டாளக்காரன்   20. ந முத்துசாமி -  யார் துணை
    21. சா கந்தசாமி  - ஆறுமுக சாமியின் ஆடுகள்
    22 . பாலகுமாரன் - நெருடலை மீறி நின்று  23. இந்திரா பார்த்தசாரதி  -
    நாசகாரக்கும்பல்
    24.கனிவண்ணன் - பேயாண்டித்தேவரும் ஒரு கோப்பை தேநீரும்
    25. ம ராஜேந்திரன்  -  நிஜங்கள்
    26. தஞ்சை ப்ரகாஷ்  - பற்றி எரிந்து விழுந்த தென்னை மரம்
    27. சோலை சுந்தரபெருமாள்- வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்டவளும் ..
    28. சி எம் முத்து   -   நாடக வாத்தியார் தங்கசாமி 
    29. சாருநிவேதிதா -  சைக்கிள்  30. உத்தமசோழன் -முதல்கல்                    
    31.ந விச்வநாதன் -  குளம்      32. உஞ்சை ராஜன்  -ஆத்திரம்                   
    33. யூமா வாஸுகி  -  விபத்து                                  

                     சென்னைச் சிறுகதைகள்  என்ற தொகுப்பை காவ்யா சண்முகசுந்தரம்  தொகுத்து காவ்யா  வெளியிட்டுள்ளது. முதல் தொகுப்பு மே 2002 ல் வெளியானது. இதில் உள்ள சிறுகதைகள்.


   1. மகாமசானம் -  புதுமைப்பித்தன்    2. ஜம்பரும் வேஷ்டியும் -  ந பிச்சமூர்த்தி
   3. ஆற்றாமை  -  கு ப ராஜகோபாலன்  4. தாம்பத்யம்   -  ஜெயகாந்தன்
   5. காற்று    -  கு அழகிரிசாமி   6. மாடசாமியின் ஊர்வலம்    - சு சமுத்திரம்
   7. அண்ணாசாலை 2094   -சுஜாதா     8. பிற்பகல்  -  சா கந்தசாமி
   9. தமிழ்ப்பித்தன் நகர் -   காசியபன்    10. தீர்வு  - திலீப்குமார்
   11. 406 சதுர அடிகள்  -  அழகிய சிங்கர்  12. அசரீரி  -  அஜித் ராம் பிரேமிள்
   13. புயல்  -  கோபி கிருஷ்ணன்          14. மலைகள்  -  எஸ் வைத்தீஸ்வரன்
   15. கடற்கரை விளையாட்டு - ஆர் ராஜகோபாலன் 
   16. பேராசிரியர் தக்கியின் ஆடு - விட்டல் ராவ் 17. நிலம் நீர் ஆகாயம்
        ஐராவதம்             18. மீதி  - மா அரங்கநாதன்
    19.மூன்று அங்குல பிரவாகம் -க்ருஷாங்கினி  20.இரவுக்காவலன்-
       பா செயப்பிரகாசம்      21. இருளின் உயிர்கள் - கி அ சச்சிதானந்தம்         
    22. அம்மாவுக்காக ஒரு நாள்- அசோகமித்திரன்  23. உயிர்நிலை  -  பூங்காற்று
        தனசேகர்   24. இன்பக் கேணி  -  பிரபஞ்சன்
    25. கற்பெனப்படுவது - ஆண்டாள் ப்ரியதர்ஷினி   26. தேடல்  -  இந்துமதி
    27. குணச்சித்திர நடிகர்  -  வண்ணநிலவன்       28. கதை  - செழியன்
    29. தார் குளிர்ந்த நதிக்கரையில் - அறிவுமதி 30. சென்ட்ரல் - சுந்தர பாண்டியன்


                   தில்லிச் சிறுகதைகள்  என்ற தலைப்பில் முனைவர் ச சீனுவாசன் தொகுத்து காவ்யா 2014 ல் ஒரு    தொகுப்பை  வெளியிட்டுள்ளது.
இந்த தொகுப்பில் 26 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்த                       தொகுப்பில் உள்ள   கதைகள்.
                 
   1. அகஸ்தியன்-  சில தபால்களும் பல தொல்லைகளும்
   2. அசோகமித்திரன் -  ஆச்சரியங்களுக்கு குறைவில்லை
   3. அம்பை -  மிலேச்சன்              4. ஆதவன்  - அப்பர் பெர்த்
   5. ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி - இந்தியா கேட்
   6. இந்திரா பார்த்தசாரதி -மனிதாபிமானம்  
   7. கலாஸ்ரீ -கோட்டு                                    
   8. கஜமுகன் - சேலத்து சீமான் 
   9. காவேரி-  அப்பா உங்களுடன் ஒரு வார்த்தை 
   10. சு சமுத்திரம்  -  ஏவாத கணைகள்
   11. சாமிமுத்து - எத்தனாவது சம்பவாமி யுகே யுகே 
   12. சாருநிவேதிதா - பிளாக் நம்பர் 27, திர்லோக்புரி
   13. சுந்தா  -  மேரியும் மகாத்மாவும்
   14. வ சுப்ரமணியன் -  ஒரு மயக்கத்தின் சிதைவுகள்
   15. சுஜாதா -  பெண்கள் வருஷம்      16. பாலகி  -   டாலி தூங்க இவர் பார்க்க
   17. பூதுகன்  -  ரயிலில் வந்து விமானத்தில் திரும்பியவன்
   18. பூர்ணம் விஸ்வநாதன் - அம்மா! ....அம்மா!       
   19.பொன்ராஜா-லீடர்                                 
   20.. மாரியப்பன் -திருட்டு  21. ரமாமணி சுந்தர் -பார்வையை மீட்க               
   22. ராகவன் தம்பி -  முறையீடு 23. லட்சுமி ரமணன் -அவள் ஒரு 
    மாதிரி               
   24. ஷாஜகான்-   ஸ்போக்கன் இங்கிலீஷ்   25 தி ஜானகிராமன்  - பாட்டியா
       வீட்டில் குழந்தை காட்சி  26. ஜோதிபெருமாள் - லவ் பேர்ட்ஸ்
 
            

     பெங்களூர் சிறுகதைகள் என்ற தொகுப்பை காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்து காவ்யா  2006 ல்   வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்.

        1. சுஜாதா -  பார்வை               2. பாவண்ணன்   -  ஆறு
       3. சுந்தர பாண்டியன்   -  சேவை 
       4. ப கிருஷ்ணசாமி  - வாசுதேவ் மிஸ்ராவின் மனைவி
       5. சு சமுத்திரம் -  பெங்களூர் தெரஸா  6. அமுதவன்    -  கரடிப்பொம்மை
       7. .சங்கரி   -   முடிவில்லாத கதை     8. உமா ஜானகிராமன் -  பரசு
       9. ஸிந்துஜா  - ராணி பிரியதர்சினி    10. தமிழவன்  -  சிதறியபடி ரூபங்கள்
      11. இரவிச்சந்திரன் -  சுயம்வரம்          12. நஞ்சுண்டன் - ராக்கம்மா
 
                     கதைக்கோவை 1  என்னும் தொகுப்பு  நூலை அல்லயன்ஸ் பதிப்பகம்  1942 ல் வெளியிட்டுள்ளது.    இதன் நான்காம் பதிப்பு  2013 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 40 எழுத்தாளர்களின் 40 சிறந்த  சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்
      1..வே சாமிநாத ஐயர்  -  தருமம் தலை காக்கும் 2. ராஜாஜி -  தேவானை
      3. எஸ் வி வி -  விவேகம்         4. க சந்தானம்  - சோதனை
      5. கி சாவித்திரி அம்மாள் -  பழைய ஞாபகங்கள்
      6.சங்கரராம் -கடைசி வேட்டை 7. ந பிச்சமூர்த்தி -    
       விஜயதசமி                    
     8. ரா ஸ்ரீ தேசிகன்  - மழை இருட்டு   9. தி ஜ ர -  ஒரு ஜோடிக்காளை                        
     10. கு ப ராஜகோபாலன் - விடியுமா?  11. தி நா சுப்ரமணியன் - தீராத ஏக்கம்              
     12. சங்கு சுப்ரமணியம்  - செம்படவச் சிறுமி
     13. பி எஸ் ராமையா - நட்சத்திரக் குழந்தைகள்
     14. தி ப பத்மநாபன் -இழந்த மணி  15. கி வா ஜகந்நாதன் - கலைஞன் தியாகம்               
     16. த ந குமாரசாமி - குகைச்சித்திரம் 17. சேது அம்மாள் - குலவதி                             
     18. சு குருசாமி  -  குழந்தை உள்ளம்   19.சி வைத்திலிங்கம் (கொழும்பு)
     மூன்றாம் பிறை   20. ந சிதம்பர சுப்ரமணியன்  - கொல்லைப்புறக் கோழி
     21. பி.எம் கண்ணன்   -  மறு ஜன்மம் 22. கொத்தமங்கலம் சுப்பிரமணியம்
      மஞ்சள் விரட்டு      23. கி ரா - சொத்துக்கு உடையவன்                     
     24. க நா சுப்ரமண்யம்  -  சாவித்திரி     25. சி சு செல்லப்பா
       நொண்டிக்குழந்தை      26. ஜே தங்கவேல் -  என் மனைவி
     27. புரசு பாலகிருஷ்ணன் - பெற்றோர்கள்    28 .ஏ முகம்மது ரஷீத்
         ஏழையின் குழந்தை   29. த நா சேனாபதி -  சண்டையும் சமாதானமும்            
     30. சம்பந்தன் (யாழ்ப்பாணம்) விதி  31. அ கி ஜெயராமன்-வாழ்க்கையின் கனவு                
     32. ஆர் நாராயண ஐயங்கார் - வாயாடி ராமு   33. மௌனி  -  அழியாச்சுடர்                              
     34. ஆர் சண்முகசுந்தரம் -  கல்லினுள் தேரை  35.பி வி சுப்ரமணியம்  -
       ஏழைக்குடும்பம்                      36. குகப்ரியை   -  தேவகி
     37. இலங்கையர்கோன் (யாழ்ப்பாணம்) -தந்தை மணம்
     38. றாலி-  கெட்டிக்காரி கல்யாணி
     39. சு சேதுராமன் -  டாக்டரின் மனைவி    40. ஆர் திருஞான சம்பந்தன்
                      ஜனகாவின் குதூகலம்

                  கதைக்கோவை 2  என்னும் தொகுப்பு  நூலை அல்லயன்ஸ் பதிப்பகம்  1942 ல் வெளியிட்டுள்ளது.  இதன் மூன்றாம் பதிப்பு   2013 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 50 எழுத்தாளர்களின் 50 சிறந்த  சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்
    1. ஆண்டாள்  -  தாயில்லாக் குழந்தை    2. ஆர்.ஆத்மநாதன்    -  அமரவாழ்வு
    3. ரா ஆறுமுகம் - களத்து வாசலில்      4. ராவ்பகதூர் ஸி எம் இராமச்சந்திரஞ்
      செட்டியார்- அநுபவ அறிவு      5. இளங்கோவன் - முதல் தாமரை            
    6. கே பி கணபதி - திருட்டு விளையாடல்  7. கதிர் -  விளம்பர மோட்டார்                
    8. கமலா பத்மநாபன்  - சியாமளா   9. கே ஜி கமலாம்பாள் - சிற்றன்னை                      
    10. கல்கி  -  அநுபவ நாடகம்      11. ஆர். கிருஷ்ணசுவாமி  - தர்மராஜன்
    எச்சரிக்கை  12. ஆர். கிருஷ்ணமூர்த்தி -  மூன்று படங்கள்
    13. பி எஸ் கிருஷ்ணமூர்த்தி - நஷ்ட ஈடு    14. வி எஸ் கிருஷ்ணமூர்த்தி - 
       ரம்பாவின் பாக்யம்    15. எஸ் குஞ்சிதபாதம் -  மகாலக்ஷ்மியின் டயரி
   16. குமுதினி  - சுதந்திரப் போர் 17 ப கோதண்டராமன் -ஞானோதயம்                     
   18. வை.மு.கோதைநாயகி அம்மாள் -  காலச்சக்கரம்  19. அ கோபாலரத்னம் -  
      ஒரு முத்தம்    20. கௌரி   -  எதிர்பாராதது   21. கி சங்கரநாராயணன்  -
      பத்திரிக்கைக்குப் புத்துயிர்  22. கி சந்திரசேகரன்  - குழந்தையின் கேள்வி
   23.கி சரஸ்வதி அம்மாள் சரிகைச்சேலை 24. ஸி ஆர் சரோஜா  - ஸைனிகா
   25. சோ சிவபாத சுந்தரம் - (யாழ்ப்பாணம்) காஞ்சனை  26. அ நா சிவராமன் - 
      நாலு அவுன்ஸ் பிராந்தி 27. சுகி  - நல்ல பாம்பு  28. சுந்தரி- ஸஹதர்மினி
   29. சுந்தா- அபலை மீராள் 30. என் ஆர் சுப்பிரமணிய ஐயர் - ஸிம்ஹக்கோட்டை
   31. துமிலன் - நவீனதீபாவளி      32. தேவன்  -  ரோஜாப்பூ மாலை              
   33. நவாலியூர் சோ நடராஜன் (கொழும்பு) -கற்சிலை  34. நல்லா முகம்மது  -
       ஏமாற்றம்     35. நாரண துரைக்கண்ணன் - திம்மப்பர்                    
   36. என் நாராயணன் -  கண்டதும் கேட்டதும் 37. மதுரம்-  பாலகிருஷ்ணன் படம்                            
   38. வி ஆர் எம் செட்டியார் -  வானவில்  39. கே எம் ரங்கசாமி -  பல்லவ
       தரிசனம் 40. வ ரா  -  கோட்டை வீடு   41. து ராமமூர்த்தி  - துர்க்கையின்
      சாபம்   42. ந ராமரத்னம்   -  சின்னம்மாள்  43. நா ராமரத்னம்  -
      வித்தியாப்பியாசம்  44. கா சி வேங்கடரமணி - பட்டுவின் கல்யாணம்
   45. கே வேங்கடாசலம்  - நாவல்மரம்   46. ஆர் வேங்கடாசலம்  -தீத்துப்பணம்
   47.லக்ஷ்மி -   பைத்தியம் 48. ஜயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் -சுந்தரி எழுதிய கட்டுரை
   49. பி ஸ்ரீ  - ராஜமல்லிகை  50. ரா ஸ்ரீ ஸ்ரீகண்டன் -  கமலத்தின் வெற்றி
              

   கதைக்கோவை 3  என்னும் தொகுப்பு  நூலை அல்லயன்ஸ் பதிப்பகம்  1943 ல் வெளியிட்டுள்ளது.   இதன் ஐந்தாம் பதிப்பு  2012 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 60 எழுத்தாளர்களின் 60 சிறந்த சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்

   1. அகிலன்  -  காசுமரம்       2. அ செ மு (யாழ்ப்பாணம்)  -  மனித மாடு
   3. பெ நா அப்புஸ்வாமி -  தீபாவளி பட்சணம்  4. அம்மணி- -வாகினி                              
   5. ஈசுவரன் (மஞ்சேரி)  தொட்டில்  6. கணபதி ஐயர்  - ச கு  -  நரசிம்மாவதாரம்
   7. மு கதிரேச செட்டியார் -  போலி பக்தர் 8. எஸ் கந்தசாமி  - தகர்ந்த கோட்டை
   9.  எம் எஸ் கமலா  - கார்த்திகைச்சீர் 10. எஸ் கமலாம்பாள்  -  ஊமைச்ச்சியின்
       கல்யாணம்   11. கா ஸ்ரீ ஸ்ரீ  -  அமிர்தம்   12. ஏ டி கிருஷ்ணமாசாரி - 
      சர்க்கரைப்பொங்கல்  13. வ வேஸு கிருஷ்ணமூர்த்தி - கடந்து போன நாட்கள்  
   14. எஸ் கிருஷ்ணன் -  பிள்ளையார் கோயில் மணி  15. கொனஷ்டை- 
     இல்வாழ்க்கை      16. கோமதி சுப்பிரமணியம்  -  மனக் கண்ணாடி
   17. சசி -  அதிருஷ்ட சுந்தரி      18. கோ த சண்முகசுந்தரம்  -  பிரார்த்தனை
   19. ஜி சதாசிவம் - காதலுக்குப் பலி 20. எம் எல் சபரிராஜன்-   ஏழைக்கு நியாயம்
   21. சீதாதேவி  - அடி கள்ளி       22. அ சீநிவாஸராகவன் - பிரிவு
   23. சுத்தானந்த பாரதியார்  -உமா கௌரி  24. கே சுந்தரம்மாள் - பாமினியின்
     தியாகம்    25. சுந்தராராமன் (பூவாளூர்)  - குறை நோன்பு
   26. ஆர் சுந்தரி  -  மாற்றாந்தாய்   27 வெ ப . சுப்பிரமணி முதலியார்
     பருவயிர மணிமாலை  28. ஆ சுப்பையா  -  செங்கமலம்
   29. வி எஸ் சுப்பையா - எட்டாத மலர் 30. பி ஆர் ஆர் சூடாமணி - அத்தை
   31. மோ ஸ்ரீ செல்லம்  - எல் டி கிரேட்  32. தங்கம்மாள் பாரதி  - கவிதை
   33. தஞ்சம்  -   மன்னிப்பு           34. பெ தூரன்  - ஓவியர் மணி
   35. நாடோடி  -  கடற்கரை  மோகினி   36. ப நீலகண்டன் -  ஸ்வீகாரம்
   37. ஆர் கே பார்த்தசாரதி  - இசைக்காதல் 38. கு மா பாலசுப்ரமணியம்  -
      வாழாவெட்டி            39. புதுமைப்பித்தன்  -  செவ்வாய் தோஷம்      
   40. ஸி ஆர் மயிலேறு - மாட்டுத் திருடன்   41. மாயாவி  -  இறுதிக்கடிதம்                              
   42. மாரார்  -  வதந்தி   43. மாஜினி  -  குல தெய்வம்                                                 
   44. டாக்டர் வே ராகவன் -  ஜாடி 45. மே சு ராமசுவாமி  - கடைக்கண் பணி           
   46. ப ராமஸ்வாமி  -  கொலைஞன்   47. லா சா ராமாமிர்தம்  -  கந்தர்வன்                   
   48. வல்லிக்கண்ணன் -  முத்து          49. வாசிமலை -  குலம் கோத்திரம்                        
   50. கே விஜயராகவன்  -  எதிரொலி  51. தே வீரராகவன்  -தரித்திர நாராயணன்           
   52. ரா வேங்கடராமன்  -  பட்டுவின் பிரயாணம்  53. வேங்கடலக்ஷ்மி - 
      அந்தகன் குழலோசை    54.எஸ் வையாபுரிப்பிள்ளை  - ராமுவின் சுயசரிதம்
   55. ஜானம்மாள்-  நாடகம் பலித்ததா?   56.வ ச ஸ்ரீநிவாச சாஸ்திரிகள்
      பங்காளிக் காய்ச்சல் 57. ஆர் ஸரஸ்வதி -  மதுமதியின் ஸ்தூபி  
   58. ஸரோஜினி ராமஸ்வாமி  - ராஜநந்தினி  59. ஸையத் முகம்மத் -  வள்ளி                            
   60. ஸோமாஸ் --அதிருஷ்டசாலி  


                  கதைக்கோவை 4  என்னும் தொகுப்பு  நூலை அல்லயன்ஸ் பதிப்பகம்  1945 ல் வெளியிட்டுள்ளது. இதன் மூன்றாம் பதிப்பு  2013 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 75 எழுத்தாளர்களின் 75 சிறந்த சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்

      1. ர அய்யாசாமி - இன்ப வேட்கை   2. ஜே.அனந்த விஜயம்  - குலத்தொழில்
      3. கரிச்சான் குஞ்சு -  சஞ்சீவினி  4. ம சீ கல்யாண சுந்தரம்  - குடும்ப தர்மம்
      5. சூ பா கல்யாணராமன்  - அறுந்த காற்றாடி 6. கஜமுகன்  - மறுமலர்ச்சி
      7. அ வே ரா கிருஷ்ணஸ்வாமி - தீர்ப்பு  8. ஸ்ரீதரம் குருஸ்வாமி - மன்னி
      9. என் ஆர் கேதாரிராவ் - வீர வெங்கிட்டு 10. வி சி கோபாலரத்தினம் -   
      பட்-பட்-பட்   11. கி ரா கோபாலன்  - சாந்தி எங்கே?12. கோபு - தீபாவளி
      எப்படி ?  13. சகுந்தலா ராஜன்  - பச்சைச்சேலை 14.வெ சந்தானம் - 
      மைதிலியின் கலக்கம்  15. ஆர் கே சாமி  -  இரு ஜீவன்கள்
     16. சாவி - நினைத்ததும் நடந்ததும்  17. அ சிதம்பரநாத செட்டியார்
     பரவாயில்லை    18. தொ மு சி ரகுநாதன்   - புத்துயிர்
     19. வி எஸ் சுந்தரராஜன்  - சிற்பியின் மனம்  20. எம் எஸ் சுப்ரமணிய ஐயர்
     வேங்கை வீரன் 21. பாலபாரதி சுப்பிரமணிய யோகி குளத்தங்கரைக் குயில்கள்
     22. சௌந்தரம்-தனக்கு வந்தால் தெரியும் 23.கே ஞானாம்பாள் - பயன் என்ன?                              
     24. திருலோக சீதாராம் - மனமகிழ்ச்சி 25. என் நாகராஜன்  - உமார்                            
     26. தா நாகலிங்கம் - கம்பி மத்தாப்பு   27. க நாராயணன்  -  எதிர்பாராதது                       
     28. வே நாராயணன் - அவளும் அவனும்  29. கே எஸ் நாராயணஸ்வாமி-
     சோதனை   30. பகீரதன்  - மருதநாயகத்தின் மனோரதம்
     31. ஏ எஸ் பஞ்சாபகேச ஐயர் - முடிவு      32. பட்டு - சரோஜாவின் கிளி
     33. கு பாலசுப்ரமணியன்  -  உத்தியோகசித்தி  34. கி வ பாலசுப்ரமணியன்     
         - பாசம்     35. எம் என் எம் பாவலர் -  நச்சுப்பல்   36. பூச்சி - 
     மறுமலர்ச்சி       37. பெருசு -  உனக்காக உயிர் வாழ்வேன்                
    38. ய மகாலிங்க சாஸ்திரி  -  சீதாவின் சுயம்வரம்
    39. எஸ் மாரிச்செட்டி -  வாழ்வு மலர் 40. கி முத்துஸ்வாமி - குல தெய்வம்
    41. பி கே முத்துஸ்வாமி - வெள்ளமும் உள்ளமும்
    42. வே ரங்கராஜன்     -  கலையும் காதலும்  
    43. ரஸிகன்  - பலாச்சுளை                             
          44. வி ராதாமணி  - குழந்தையின் கவலை  45. எஸ் எஸ் ராமசாமி  -  நாடக
       வாழ்க்கை  46.. வெ ராமராவ்  -  அன்பின் அழைப்பு
    47.கே எஸ் ராமஸ்வாமி சாஸ்திரி - போனதுபோல் வந்தான்
    48. எஸ் ஏ ராமநாதன் - என் கிளி  49. எஸ் ராமாநுஜன்-  வாழ்க்கையில் குறை           
    50. எஸ் என் ராமு  - ரகுபதியின் சகோதரன்  51. ராஜ்யஸ்ரீ - இருண்ட பாதை                        
         52. ஆர் எஸ் ருக்மிணிபெண்ஜன்மம்  53. பி என் லக்ஷ்மி -அன்பா?இரக்கமா ?                               
    54. ஏ எஸ் லக்ஷ்மி - மன்னிப்பு 55.வி லோகநாதன்  -  நழுவி விழுவானேன் ?                        
    56. வஸந்தன் - தூங்கா விளக்கு     57. எஸ் விசாலாக்ஷி - வருஷப் பிறப்பு                 
   58. ல ரா விசுவநாத சர்மா மின்னல்கொடி  59. விந்தன் - கண்ணம்மா                        
   60. எஸ் வேங்கடசுப்ரமணியன் -  இருவேறுலகம் 61. எம் வி வேங்கடராமன்
       இந்திராணி     62. ஏ ஜி வேங்கடாசாரி  - ரங்கூன் கமலம்
   63. சி ஸ்ரீ வேங்கடேசன் - வாழ்க்கை ஒரு கனவா ?    64. வ வேணுகோபாலன்
       சிற்பியின் தியாகம்    65. கே வைத்தியநாதன்   - சோப்புக்காரி            
   66. ஆர் ஜகந்நாதன் பாணிக்கிரகணம்   67. டி எம் ஜம்புநாதன் - சாந்தி                           
   68. கே எஸ் ஜம்புநாதன் - நப்பாசை  69. ஆ வெ ஜெயராமன்  -  பெரிய இடத்து
      சமாச்சாரம்       70. தி ஜானகிராமன் - கமலியின் குழந்தை
   71. கே ஸ்ரீநிவாஸ்  - என் தோட்டம்     72. ரா ஸ்ரீநிவாஸன் - அவியாச்சுடர்
   73. கா மு ஷெரிஃப்   - கடமை    74. ஸத்யதாமா - குழந்தையின் பிரார்த்தனை
   75. ஹரினி - தெய்வப்பெண்


       அல்லயன்ஸ் கம்பெனி தொகுத்த கதைக்கோவை 4 தொகுதிகளுக்குப் பிறகு வெளிவந்த தலை வாழை  என்ற தொகுப்பு 37 மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளைக்கொண்டது. இந்த தொகுப்பு நூல்   19994 ம் ஆண்டு அன்னம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தொகுப்பு ஆசிரியர் இ எஸ் தேவசிகாமணி.
கோவை லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை நிறுவனர். இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.
                
   1. அசோகமித்திரன் -  அப்பாவின் சிநேகிதர்     2. கே சி எஸ் அருணாசலம்  -
            பவளக்கால் நூலான்  2. அன்னம்- கோடு தாண்டிய  கோதை                           
   4. இந்திரா பார்த்தசாரதி -  பதி, பசி, பாசம்  5. உமாசந்திரன்  - ஈர்ப்பு                                                
   6. எஸ் வி எஸ்  - என்றும் யுவதி  7. எம் கே சங்கரன்  - சம்மத்தித்தால் தப்பா                 
   8. சார்வாகன் - ரப்பர் மாமா      9. சிட்டி-  வழியிலே  வந்தவள்                                     
   10. தி க சிவசங்கரன்   -  ஏழணா 11. சி சு செல்லப்பா -  கவுரவிப்பு                                  
   12. சோலை இருசன் - தேதி 24      13. மீ ப சோமு   -  பித்தம் தெளிந்தது                     
   14. டாக்டர் தயா -  பூங்குன்றத்து முனிவர்   15. துறைவன்  -  அக்கினிக்குஞ்சு                          
   16. இ எஸ் டி -  எதிர்பாராத விருந்தாளிகள்   17. ர சு நல்லபெருமாள்
    யாருக்கு யார் துணை        18. நாரண துரைக்கண்ணன் - வேனில் வந்தது
  19. மகரம் -  உதிர்ந்த ரோஜா        20. ஆ மாதவன்  - மீன் முட்டி வளாகம்
  21. மாறன் - திருநெல்வேலி மைனர்  22. மாயாவி -  புற்றும் பாம்பும் 
  23. தொ மு சி ரகுநாதன் - ஆனைத்தீ 24. ம ந ராமசாமி -  பூணல்
  25. லா சா ராமாமிர்தம் -  அவள்     26. ராஜம் கிருஷ்ணன் - விழிப்புணர்வு
  27. கி ராஜநாராயணன் -  திரிபு     28. வல்லிக்கண்ணன் -  இயற்கையின் சிரிப்பு
  29. வாசவன்  -  மலரத்தெரிந்த அரும்புகள் 30. விக்கிரமன்-  வளர்த்த மான்
  31. எம் வி வெங்கட் ராம்   - ஊஞ்சல்   32. த ஜெயகாந்தன்  - யுகசந்தி
  33. ஆர் எஸ் ஜேக்கப்  - சர்வர் அப்பாதுரை  34. ப ஸ்ரீனிவாசன்  -  வல்லநாட்டுக்
      கள்ளன்        35. செ கணேசலிங்கன் (இலங்கை) - ஆண்மை இல்லாதவன்   
 36. டி வி ராகவன் பிள்ளை (மலேசியா)-மதுவும் மதுவும்
 37. மா ராமையா -(மலேசியா) - கலையாத கருமேகங்கள்


   ஐம்பத்து நான்கு பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை  தொகுத்து "ஒரு நந்தவனத் தென்றல் " என்ற     தொகுப்பு நூலை இ எஸ் தேவசிகாமணி தொகுத்து விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு 1993 ல் வெளியானது.            இதில்   உள்ள கதைகள்.
                     
  1. பித்துக்கொள்ளி - அநுத்தமா                 2. சுக்காள் -  அனுராதா
  3. காலச்சுமைதாங்கி - அனுராதா ரமணன்     4. நீடித்த உறவு  - அம்பை லீலி
  5. மாமியார் -  அரசு மணிமேகலை    6. அசோகவனம் -ஆண்டாள் பிரியதர்சினி
  7. தண்டனை -  இந்துமதி              8. மனிதர்கள்  - இந்து வரதன்
  9. புரிந்து கொண்டாள் சரசு -  ஈஸ்வரி தெய்வ நாயகம் 
 10. வல்லமை-  உமா கல்யாணி      11. கோதை  -  கண்ணம்மாள் பகவதி                        
  12. தர்மத்திற்கு ஒரு தர்மம் - கமலா சடகோபன்
 13. நெற்றிக்கண் திறந்த போது -  கலா பாலசுப்ரமணியன்  14. இளமை மணம்
    காஞ்சனா ஜெயதிலகா     15. முனியக்கா - காவேரி                              16. தாயென்றும் மகனென்றும் - கோதா பார்த்தசாரதி 
17. இந்த யுகம்  பூத்துக் குலுங்குமடி - கோமகள்  18. கதாநாயகி -  கோமளா வரதன்
19. கோடாரிக் காம்புகள்-சரளா ராஜகோபாலன் 20. விதியின் பிழை - சரோஜினி
    ஸ்ரீராம்       21. மூன்றே இலையுடன் ஒரு போதிமரம் - சந்திரா ராஜசேகர் 
22. எல்லைகள்-  சாந்தா தத்  
23. ஆயா  -சிவசங்கரி        24. கூர்முனையில் ஒரு வளைவு - சரயு ( சுப்புலட்சுமி 25. வேள்வி -  சுமங்கலி             26. தேவகியைத் தேடி  -  சூடாமணி 
27. தாயிற் சிறந்த  -  தமயந்தி      28. மீண்டும் ஒரு பயணம் -பராசக்தி( மலேசியா)
29. கோவிலாகிப் போன வீடு  - பரிமளமுத்து     30. சிறை  -  .பிரேமா
31. நாளைக்கு சுபத்திரா கல்யாணம் சொல்லவேண்டும் - பிரேமா நந்தகுமார்
32. அஞ்சலை ஆத்தா - வி பூரணி ( செல்வி லீமா ரோஸ்) 33. சில நியாயங்கள்
   சிலருக்கு மட்டும் - மங்களம் ராஜம்     34. சந்தர்ப்பவாதிகள் -  மதனகல்யாணி                     35. மூடு அவுட் -  மாலதி ஹரீந்தரன்    
36. ஒரு தாய் காத்திருக்கிறாள்    ராஜலட்சுமி சுப்பிரமணியம் 37.இரு கால்களையும் ஊன்றி நடக்க - ருக்மணி  பார்த்தசாரதி    38.ஒரு மரணத்தின் விலை - லட்சுமி ரமணன்
39. என் பூரணிக்காக - லட்சுமி ராஜரத்னம்    40. ஆரம்பத்தில் ஒரு அஸ்தமனம்
   லீலா கிருஷ்ணன்    
41. வடிகால் -  வாஸந்தி                        42. பெற்ற மனசு - விமலா ரமணி  43. பண்டிகை  -  விஜயம் சரஸ்வதி              44. இடிதாங்கி இடிவதில்லை  -  வேதா கோபாலன்
45. சீர்வரிசையில் ஒரு ஸ்கூட்டர்- ஷைலஜா46. பாதிப்பு யாருக்கு- கே ஜெயலட்சுமி
47. அடைக்கலம் - ஜோதிர்லதா கிரிஜ  48. ஆடும் நாற்காலி  - ஹம்சா தனகோபால்
  49. முகங்கள் -  எஸ் லீலா           50. மிதியடிகள்  -  உஷா சுப்ரமணியன்
  51. காளி -  திலகவதி                 52. அழுதபிள்ளை - சிவகாமி
  53. லக்ஷ்மி என் மகள் - வசுமதி ராமசுவாமி  54. காக்கைகளும் கழுகுகளும்
     பாரதி        


  எஸ் ஷங்கரநாராயணன்  தொகுத்த ஆகாயப்பந்தல் என்னும் நூல் 1991ல் வெளியானது. அதன் மறுபதிப்பு  2001 ல் வெளியானது. உதயகண்ணன் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 30 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
                     இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.
                     
 1. கண்ணன் மகேஷ் -  பொழுது விடியட்டும்  2. மு கி சந்தானம்  -   பாதிப்பு
 3. கோபுல்ஸ்ரீ -  உஞ்ச விருத்தி              4.அறிவழகன்  -  வேகம்
 5. விழி பா இதயவேந்தன் -  பிரியம்   6. இரவிச்சந்திரன்  - கோதை பிறந்த ஊர்
 7. ஜெயமோகன்  -  ஹம்பி     8. தமிழ் மகன்  -  கற்றதனால்....
 8. மோகனன் -  ஒளியற்ற பிரதேசத்தில்   10. கௌதம சித்தார்த்தன் - தம்பி
 11. பரணி - பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப்பொழுது
 12.பிருமீள் - காடன் கண்டது      13. அ எக்பர்ட் சச்சிதானந்தன் -  மத்தேயு
 14. கார்த்திகா ராஜ்குமார்  - நனையத் தோன்றுகிறவர்கள்   15. கர்ணன் -  ரசிகர்
 16. அனாமிகா-   அணிற்பாலம்   17. டி எம் நந்தலாலா -   டெல்ஸ்கோப் ஆகாயம்
 18. எல் ரகோத்தமன் - சிதறல்கள்  19. ம வே சிவக்குமார் - இறங்கப்போறீங்களா?
 20. ஞானசூரியன்  -  ஒட்டடைத் தாத்தா  21. ரோகாந்த் -  தேவை ஒரு மனிதன்   
 22. சுப்ரபாரதி மணியன் - கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்
 23. பாவண்ணன்  -  பேசுதல்           24. ஜெயடேவி -  எறும்புகள்
 25. முருகு -  வீடு ... ஆனது26. ஜோசப் லூயிஸ் -அம்மா சொல்லிர்க்கக் கூடிய
    கதை    27. எஸ் ஷங்கரநாராயணன்  -  லாரி   28. ராமேந்திரா -  இன்று
 29. ஸில்வியா -  ஸ்வப்ன ஸ்னேகிதர்     30. கோபிகிருஷ்ணன் -  விழிப்புணர்வு


    எஸ் ஷங்கரநாராயணன்  தொகுத்த பரிவாரம் என்னும் நூல் 1994ல் வெளியானது. உதயகண்ணன்     வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 16 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.
                             
 1. கூந்தல்  - செ யோகநாதன்       2. உறவு  -  மா அரங்கநாதன்
 3. முருங்கைக்காய் - செ சங்கர்பாபு  4. ஊதுபத்தி  - நாஞ்சில் நாடன்
 5. இறந்த காலம் - பவா சமத்துவன்  6. அந்நியம் - ம காமுத்துரை
 7. அமலி  -  லா ச ரா              8. தன்வினை  - என் ஸி அனந்தாச்சாரி
 9. ஆமை சமூகமும் ஊமை முயல்களும்  -  இந்துமதி
 10. கீழ்மை  -  தீஸ்மாஸ்  டிசெல்வா  11. வெறுப்பைத் தந்த விநாடி - வத்ஸலா
  12. யுகங்கள் -  சாந்தன்               13. இருட்டு  -  தேனி சீருடையான்
  14. புழு -  ம ந ராமசாமி 15. வான்கோழிகளின் ஆகாயம்  - எஸ் ஷங்கர
     நாராயணன்   16. நடேசக்கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும்  - 
     வண்ணதாசன்



       இந்த நூற்றாண்டு சிறுகதைகள்  பாகம்-1  ஐ விட்டல் ராவ் தொகுத்து கலைஞன்  பதிப்பகம் 1993 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 31 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில் உள்ள   சிறுகதைகள்

  1. பிரம்ம ராக்ஷஸ் - புதுமைப்பித்தன்      2.  பரிவு   - சங்கரராம்
  3. சந்துப் பூனைகள் -  மஞ்சேரி ஈஸ்வரன் 4. அதிர்ச்சி  - த நா குமாரஸ்வாமி
  5. வௌவால் - ஆனை ஸு குஞ்சிதபாதம்  6. புது மாதிரி கதை - கொனஷ்டை
  7. பணம் பிழைத்தது -  பி எஸ் ராமையா   8. தான் - கி ராஜநாராயணன்
  9. பாயசம்  - தி ஜானகிராமன்              10. பயணம் -இந்திரா பார்த்தசாரதி
  11. தியாகம்  - கு அழகிரிசாமி        12. தமிழ்பித்தன் நகர் -  காசியபன்
  13. புவனாவும் வியாழக் கிரகமும் - ஆர் சூடாமணி
  14. புற்றில் உறையும் பாம்புகள் - ஆர் இராஜேந்திர சோழன்
  15. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்              16. நேரம்  - பூமணி
  17. குடும்பச்சித்திரம் - வண்னநிலவன்        18. விடாய் - ஜோதிர்லதா கிரிஜா
  19. பிள்ளையார் கோவிலில் ஒரு பிணம் - கி அ சச்சிதானந்தம்
  20. காகம்  - ம ந ராமசாமி     21. ஒரு செருசலேம் - பா செயப்பிரகாசம்
  22. பறிமுதல்  -  ஆ மாதவன்  23. மீன் - பிரபஞ்சன்
  24. இளிந்த சாதி - ஜி நாகராஜன்
  25. ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும் - தமிழவன்
  26. இருட்டில் நின்ற - சுப்ரமண்ய ராஜு      27. சங்கை -  இரா முருகன்
  28. கட்டில் - கௌதம சித்தார்த்தன்          29.  மாயை  - தேவபாரதி
  30. அப்பாவின் பள்ளிக்கூடம் - ந முத்துசாமி
  31. மரத்தடிக் கடவுள் - தி ஜ ரங்கநாதன்                               


                          
   இந்த நூற்றாண்டு சிறுகதைகள்  பாகம்-2  ஐ விட்டல் ராவ் தொகுத்து கலைஞன் பதிப்பகம்   வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 35 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில் உள்ள   சிறுகதைகள்

    1. காற்று - சுப்ரமண்ய பாரதியார்        2. பிரபஞ்ச கானம் -  மௌனி
    3. யோகம் - லா ஸ ராமாமிர்தம் 4.வயது வந்து விட்டது - கு ப ராஜகோபாலன்
  5. ஸரசாவின் பொம்மை - சி சு செல்லப்பா 6. மாங்காய்த்தலை - ந பிச்சமூர்த்தி
  7. அயோத்தி -  நகுலன்   8. ஜின்னின் மணம் - நீல பத்மநாபன்
  9. பல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி   10. கங்கவரம்-  பி சா குப்புசாமி
  11. முடியாத வேலை -அம்ஷன்குமார்           12. திரிசங்கு - அம்பை
  13. வெளியே ஒருவன் - நாரனோ ஜெயராமன்  14. நூறுகள்  - கரிச்சான் குஞ்சு
  15. பேய்  - கோபிகிருஷ்ணன்    16. மீன் குஞ்சுகள் - ஆர் ராஜகோபாலன்
  17. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி 
  18. கூரை மேலேறி கோனச்சுரைக்காயை அறுக்கத் தெரியாத குருக்களார் - 
      சிவசங்கரா  19.ஒரு பயணத்தின் முடிவு  - ஸ்ரீ வேணுகோபாலன்     
  20. எலி வளைக்குள்ளே வெள்ளம் ஏறிய போது - பொன்னீலன்
  21. தீ வேலி - வல்லிக்கண்ணன்    22. சூழல் -  ஜெ கிளாரிந்தா
  23. அது - ஸ்டெல்லா புரூஸ்      24. சரோஜாவின் சவுரி  - க ந சுப்ரமணியம்
  25. கண்ணீர்ப்புகை - ஞானக்கூத்தன்    26. அந்தத் தெருவின் முடிவில் ஒரு
      சுடுகாடு ஜெயபாரதி       27.துணி - இந்துமதி                                 
  28. ஒட்டுப்புல் - நா கிருஷ்ணமூர்த்தி 
  29. இடர்  - அழகிய சிங்கர்                      
  30. வெள்ளைக் காக்கைகள் -எஸ் சங்கரநாராயணன்
  31.வெடிக்காரன் - செ யோகநாதன்        32. துரோகம் - பாவண்ணன்
  33. என் வீடு  -  மாலன்          34. திருமணம்  - ப ஸ்ரீனிவாசன்
  35. நியாயங்கள்-வாஸந்தி                             

                        

    இந்த நூற்றாண்டு சிறுகதைகள்  பாகம்-4  ஐ விட்டல் ராவ் மற்றும் அழகிய சிங்கர் தொகுத்து கலைஞன்   பதிப்பகம் 2001 ல்  வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 34 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில்                                    உள்ள சிறுகதைகள்.
 1. வ வே சு ஐயர் -    கமல விஜயம்       2. ராஜாஜி  -  சபேசன் காப்பி
 3. மகாலிங்க சாஸ்திரி -    சீதாவின் சுயம்வரம் 
 4. தஞ்சை பிரகாஷ் -அஞ்சுமாடி 
 5. ஞாநி -  தண்ணீர்                                                      
   6. விக்ரமாதித்யன்  - எலிஸபெத் ராணி    7. சி மோகன்  -  அம்மாவின் மரணம்                          
 8. தமிழ்ச்செல்வன் -  அரக்கு முத்திரை
 9.ப கிருஷ்ணசாமி  - வாசுதேவ் மிஸ்ராவின் மனைவி  10. ர சு நல்லபெருமாள்
  சங்கராபரணம்  
 11. தமயந்தி -  தொடர்வது                                          
 12. அறிவுமதி  - அடமானம்       13. இரா நடராஜன் -  தாத்தாவின் காஞ்சனபுரி          
 14. காஞ்சனா தாமோதரன் - திவ்ய தரிசனம்   15. மீ விஸ்வநாதன் - மிருதங்கம்                              
 16.சிவதாணு கள்ளியங்காட்டு    17. பா ராகவன்  - மாயக்கயிறு                                    
 18. மு சிவலிங்கம்- ஒரு விதை நெல்  19. ஸ்ரீதர் சாமா -   தொட்டில் பழக்கம்
    மரப்பெட்டி மட்டும்  20 . இரா கதைப்பித்தன் - தகனம்                              
 21. பீ மரியதாஸ் முரண்பாடு  22. சங்கர ராமசுப்ரமணியன் - பச்சை அறை 
 23. கமலாலயன் - ஓய்ந்தவர்கள்    24. விழி பா இதயவேந்தன் -  
  விழுது                            25. புகழ் -  நாய்ப் பொழப்பு  
 26. ப்ரதிபா ஜெயச்சந்திரன் - ஒரு நாள்  27. லட்சுமி மணிவண்ணன் - 36 ஏ பள்ளம்  28. ஜி காசிராஜன்  - தேனீக்கள்                   29. சூர்யராஜன் -  தக்கை   
30. விஷ்ணு நாகராஜன்   -  தேவமலர்    31. ஷங்கர் ராமன்  -  அவரவர் ஏமாற்றம்  32. பாதசாரி - இலைகள் சிரித்தன     33. கோகுல கண்ணன் - பாம்பும் பிற கனவுகளும்
34. ஏ ஏ ஹெச்  கே  கோரி - இவன் அவள் அரேபியா  

 இந்த நூற்றாண்டு சிறுகதைகள்  பாகம்-5  ஐ விட்டல் ராவ் மற்றும் அழகிய சிங்கர் தொகுத்து கலைஞன்  பதிப்பகம் 2002 ல்  வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 35 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில்  உள்ள சிறுகதைகள்.
                              
  1. பலாச்சுளை -  ரசிகன்       2. தயாசமுத்திரம்  - எஸ் வி வி
  3. கங்கா - ஆர் வி            4. வேதப்பயிர்  - மகரிஷி
  5. குலச்சுவடுகள்- இனியவன்   6.காலில்லாத  தேவதைகள்- திருப்பூர் கிருஷ்ணன்
  7. ஆயுள் தண்டனை நரசய்யா   8.    எதிர்கொள்ளல் :சில குறிப்புகள்
     கார்த்திகா ராஜ்குமார்       9. மருந்து - சோ தர்மன்                            
  10. செங்கல் - அ முத்துலிங்கம்   11. சிதைவு - ஆர் வெங்கடேஷ்                 
  12. உள்ளும் புறமும் - தங்கர் பச்சான்   13. டீ  - சாருநிவேதிதா                               
  14. உயிர்ப்பிரிகை - மாலதி   15. சர்ப்பக் காவடி சாமியண்ணன் - ராஜன் பாபு    
  16. நீச்சல் குளம் -  எம் ஜி சுரேஷ்   17. அளவு கோல் - தேவதச்சன்                   
  18.  தேய்பிறைகள் - எஸ் ஜோதி விநாயகம்
  19. புறாக்கள் பறக்கத் துவங்கி விட்டன -  ஜோசப் டி சாமி
  20. புரியுமா ?  -   ஜ சாமிநாதன்   21. கடற்கரை  -   நாராயணன்
  22. காலத்திற்கு அப்பால் -  ஸுப்ரபூ சங்கர் 23. அக்கினிக் குஞ்சுகள் -- மலரன்பன்
  24. நீலம்  - ஸங்க்ராந்த்        25. அன்று  - ட்டி எம் நந்தலாலா  
  26. பார்வை -  ராஜசுந்தரராஜன்  27. கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டி
      அஜயன் பாலா        28. விரல்  - பிரியதர்ஷன்                                 
  29. பீதி  -  தளவாய் சுந்தரம்   
  30. மேரி -ஜோர்ஜ் சந்திரசேகர்                        
     32. உயிர் பித்து  - பெருந்தேவி 33. சுழல் நாண்யம்    -  யுவன் சந்திரசேகர்       
  34. நீலம்  -  பிரமிள்     35. இழப்பு  - நா சேதுராமன் 

                            
      இந்த நூற்றாண்டு சிறுகதைகள்  பாகம்-6  ஐ விட்டல் ராவ் மற்றும் அழகிய சிங்கர் தொகுத்து கலைஞன்   பதிப்பகம் 2002 ல்  வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 32 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில்  உள்ள சிறுகதைகள்.

 1. அவன் மனைவி  - சிட்டி       2. கோவிந்தனும் வீரப்பனும் - கல்கி
 3. ஊமைச்சி காதல் -  நாலி      4. தொண்டு  -  ரஸவாதி             
 5. ராஜதந்திரிகள் -  நா பார்த்தசாரதி   6. சிபார்சு -   கிருஷ்ணன்
 7. உல்கா - எஸ் விஜயராகவன்       8. புன்சிரிப்பு  -  கி ரா
 9. பழிக்குப் பழி  - த ந சேனாதிபதி  
 10. வேலையும் விவாகமும் - ந சிதம்பர சுப்ரமணியன்
 11. ஓர் இரவு  -  வையாபுரிப் பிள்ளை 12. தாளமுடியாத மன்னிப்பு - மேலாண்மை
    பொன்னுச்சாமி          13. இசை நாற்காலி  - வையவன்                     
 14. மத்துக் கயிறு -  கண்ணன் மகேஷ்   15. கர்மவியாதி     -   
   பராங்குசம்                     
 16. எனது மொழியில் உனக்கு ஒரு காதல் கதை - ரமேஷ் ப்ரேம்
 17. பறவைகளும் ரேஷன் கார்டும் - செண்பகம் ராமசுவாமி
 18. சிறகுப்பருவம்-  செந்தூரம் ஜெகதீஷ்  19.ஆஸ்தி  -  து ராமமூர்த்தி
 20. சில பார்வைகளும் ஒரு நோக்கும் -     தயானந்தன் ஃப்ரான்சிஸ்
 21. கடைசிக் காடு  -  சிவகாமி     22. வாளை -  ஜே எம் சாலி
 23. பட்டா -   மா ராஜேந்திரன்    24. ஏழாமிடத்தில் சில கிரகங்கள் - கோபுல் ஸ்ரீ
 25. உயிர்த்தளம் - ராஜன் அரவிந்தன்        26. ஒற்றைச்சிறகு - சூத்ரதாரி
 27. யாதும் ஊரே  - டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜ்
 28. கன்றுக்குட்டி மேய்ந்த புத்தகம் -  இதயன்  29. மாயக்கிளிகள் -  ஜீ முருகன்
 30. களவு  - யூமா வாசுகி                31. சைட் ரீல்  - லாவண்யா
 32. வாடகைக்கு அறை -  வே சபாநாயகம்                                           


     மதுரை மீனாட்சி புத்தக நிலையம் கதை அரங்கம் மணிக்கதைகள் என்ற தொகுப்பு வெளியிட்டுள்ளது.இதுவரை 6 தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
                      
  மணிக்கதைகள் 1  . இந்த தொகுப்பு 1961ல் வெளியானது. இதில் 10 கதைகள்
   உள்ளன.  இதில் உள்ள கதைகள்.

  1. அகிலன் -  நினைப்பு             2. கு அழகிரிசாமி -   காற்று
  3. ந சிதம்பர சுப்ரமணியம் - பூஜையும் போதையும்
  4. சுந்தர ராமசாமி - வாழ்வும் வசந்தமும் 
  5. நா பார்த்தசாரதி  - நெருப்புக்கோழி               
  6. ரகுநாதன்  -  பிரிவு உபசாரம்    7. ராஜம் கிருஷ்ணன் -   
  ஏக்கம்                       
  8. தி ஜானகிராமன்  -  முள் முடி  9. ஜெகசிற்பியன் - நித்திய ஓய்வு                   
  10. ஜெயகாந்தன்   - நான் இருக்கிறேன்

                     
   மணிக்கதைகள் 2 . இந்த தொகுப்பு 1987ல் வெளியானது. இதில் 14 கதைகள்
   உள்ளன.  இதில் உள்ள கதைகள்.

                     
 1. ஆதவன் -  சிரிப்பு          2.   சு சமுத்திரம்   -எக்குடி தோற்பினும்
  3. சுப்ரமண்ய ராஜு  - நாக்கு         4. ஆர் சூடாமணி  - ரோஜாப்பதியன்
  5. நாஞ்சில் நாடன்   -  சுரப்பு        6. நீல பத்மநாபன்  -- மூவந்தி
  7. பாலகுமாரன் -  எதிர் எதிர் உலகங்கள்   8. பிரபஞ்சன்  - அப்பாவின் வேஷ்டி
  9. ஆ மாதவன்  -  விருந்து              10. பூமணி - கிழிசல்
  11. கி ராஜநாராயணன் -  தாவைப்பார்த்து  12. வண்ணதாசன்
       போய்க்கொண்டிருப்பவன்             13. வண்ணநிலவன்  -   
மழை                            
  14. ஜெயந்தன்  - குணாலட்சுமி
        
   மணிக்கதைகள் 3 . இந்த தொகுப்பு 1989ல் வெளியானது. இதில் 12 கதைகள்
   உள்ளன.   இதில் உள்ள கதைகள்.

     1. இந்துமதி  - தேடல்      2. இராகுலதாசன்  - வாசலில் சில பூக்கோலங்கள்
     3. சா கந்தசாமி  - குறுக்கீடு   4. கார்த்திகா ராஜ்குமார் - சிறகற்ற பறவைகள்
     5. எஸ் சங்கரநாராயணன் -  வாழ்வின் மிச்சம் 6. சுப்ரபாரதி மணியன் - இடம்
     7. தனுஷ்கோடி ராமசாமி - ஆயிரங்கண்ணுடையாள்  8. என் ஆர் தாசன்  -
        காற்றூதிய பலூன்கள்        9. திலீப்குமார் - நிகழ மறுத்த அற்புதம்          
     10. பாவண்ணன் -  ராதை     11. மேலாண்மை பொன்னுச்சாமி -  ஈரம்          
     12. மாலன்  - அலங்காரம்

           மணிக்கதைகள் 4 . இந்த தொகுப்பு 1990ல் வெளியானது. இதில் 11
    கதைகள் உள்ளன.  இதில் உள்ள கதைகள்.

     1.அய்க்கண் - வைஷ்ணவ ஜனதோ       2. மா அரங்கநாதன்  -  மீதி       
     3. உதயஷங்கர்  - மார்ட்டின் ஹைடேக்கரும் மத்தியானச்சோரும்
     4. கோபிகிருஷ்ணன் - கலக்க மறுத்த கண்கள்
     5. ம வே சிவகுமார் -  கிலி கிலி கிலி
     6. எம் ஏ சுசீலா -  புதிய பிரவேசங்கள்      7. சூர்யகாந்தன் -  விடுதலை
     8. பிரதிபா ராஜகோபாலன்  -  வலி     9. சி ஆர் ரவீந்திரன்  -  பிட்சாடனர்
     10. வாஸந்தி   -   வழக்கு     
     11. விமலாதித்த மாமல்லன் -  தாசில்தாரின் நாற்காலி


         மணிக்கதைகள் 5. இந்த தொகுப்பு 1997ல் வெளியானது. இதில் 9 கதைகள்
     உள்ளன.  இதில் உள்ள கதைகள்.

     1. வல்லிக்கண்ணன் -   அலைகள்     2. அசோகமித்திரன்  -  தொப்பி
     3. ஜோதிர்லதா கிரிஜா - போராட்டம்   4. அம்பை  - வெளிப்பாடு
     5. தோப்பில் முகம்மது மீரான் - ஓமவல்லி   
     6. கந்தர்வன்  - மங்கலநாதர்
      7. திருப்பூர் கிருஷ்ணன் - காலில்லாத தேவதைகள் 
      8. இரா முருகன் -  இடைவரிகள்
      9. ஜெயமோகன்  -  ஆயிரம்கால் மண்டபம்


         மணிக்கதைகள் 6. இந்த தொகுப்பு 2004ல் வெளியானது. இதில் 10 கதைகள்
      உள்ளன. இதில் உள்ள கதைகள்.

        1. சோ தர்மன்  - வனகுமாரன்      2. தமயந்தி  - காற்றின் உள்ளொலிகள்
        3. உஷாதீபன்  - மனு              4.நரசய்யா - நீதியும் நியாயமும்
        5. சு வேணுகோபால் - அவதாரம்  
        6. இந்திரா சௌந்திரராஜன் - வானம் நமக்கொரு போதிமரம்
        7. பாமா -  வெறுங்கூடு            8. பாரதிபாலன் - சொல்ல முடியாதது
        9. இரா நடராஜன்       - பிலிசிங்கு எனும் சிக்குலிங்கத்தின் வாக்குமூலம்
        10.. படுதலம் சுகுமாரன்  - புருஷன் கட்டின வீடு


   சிவசங்கரியின் மணிவிழாவையொட்டி வானதி பதிப்பகம் சிவசங்கரி தொகுத்த
 " நெஞ்சில் நிற்பவை "  என்ற தொகுப்பில் 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளை  
  வெளியிட்டுள்ளது. 2002 ல் இது வெளியானது


    நெஞ்சில் நிற்பவை - முதல் பாகம்,   இதில் உள்ள  30  கதைகள்.
                   
   1. அம்பை  - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியார்  
   2. அநுத்தமா -  காற்றுவாக்கில்    3. அனுராத ரமணன் - சுவாமியின் சிநேகிதி               
   4. அசோகமித்திரன்  - பங்கு 
   5. இந்திரா பார்த்தசாரதி  - குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
   6. இந்துமதி   -  குருத்து                 7. இமையம்   -  மாடுகள்
   8. உஷா சுப்ரமணியன் - த்ரில்            9. கந்தர்வன்   -  காளிப்புள்ளெ
   10.மு கருணாநிதி -  அணில் குஞ்சு   11. கார்த்திகா ராஜ்குமார்  - ஆக்டோபஸ்
   12.காஞ்சனா தாமோதரன் - இனி      13. கீதா பென்னட்  -  வித்தியாசம்
   14. சு சமுத்திரம்  -  திரிசங்கு நரகம்  15. சிவசங்கரி  - செப்டிக்
   16. சிவகாமி  -  காகிதக் கதவு        17. ம வே சிவக்குமார் - ஹனுமார்
   18. கு சின்னப்ப பாரதி  - மனித யந்திரம்      19. சீதா ரவி  - கமலாம்பா
   20. சுப்ரபாரதி மணியன் - வாக்கு     21. சுந்தர ராமசாமி  - எங்கள் டீச்சர்
   22. சுஜாதா - நிஜத்தைத்தேடி         23. ஆர் சூடாமணி  - நடன விநாயகர்
   24. பா செயப்பிரகாசம் - காற்றில்லாக் கூடுகள் 
   25. டி செல்வராஜ் -  சாது மிரண்டால்
   26. சோ தர்மன்   - () ஹிம்சை 
   27. திருப்பூர் கிருஷ்ணன் - ராமசாமி துரத்துகிறான்
   28. திலகவதி -  யக்கா            29. திலீப்குமார் - அக்ரகாரத்தில் பூனை
   30. தோப்பில் முகம்மது மீரான் வட்டக்கண்ணாடி

நெஞ்சில் நிற்பவை பாகம் இரண்டு.  இதில் உள்ள 30 கதைகள்.

    1.  நரசய்யா  - நனைந்த உடல்கள் உலர்ந்த இதயங்கள்
    2. நாஞ்சில் நாடன்  - ஊதுபத்தி 3. நீல பத்மநாபன்   - குழந்தையும் தெய்வமும்
    4. பாமா  - ஒரு தாத்தாவும் எருமையும்       5. பாலகுமாரன்  - கடற்பாலம்
    6. பாவண்ணன் - போர்க்களம்     7. பிரபஞ்சன்  -  கருணையினால்தான்
    8. பூமணி  -  கரு                 9. பொன்னீலன் - ஈரம்
    10. மாலன்  - அறம்             11. அ முத்துலிங்கம் - கறுப்பு அணில்
    12. இரா முருகன்  -  விற்பனையாளர்கள் கவனிக்கவும்
    13. மேலாண்மை பொன்னுச்சாமி  -  பூமிக்குப் பொறுக்காது
    14. ரா கி ரங்கராஜன் -  வாசலில் குளம், கொல்லையில் காவேரி
    15. ராஜம் கிருஷ்ணன் - உயிர்கள்    16. இராஜகுமாரன் -  அக்கரைப் பச்சைகள்
    17. கி ராஜநாராயணன் - நிலை நிறுத்தல்  
    18. லா சா ராமாமிர்தம்  -  ஈ ஜகமுலோ திக்கெவரம்மா
    19. வல்லிக்கண்ணன் - வேங்கைப்புலி 20. வண்ணநிலவன்  -  உள்ளும் புறமும்
    21. வாஸந்தி  -  தேடல்       22. விட்டல் ராவ் - பேராசிரியர் தக்கியின் ஆடு
    23. வையவன் -  டிராக்டர்              24. ஸ்ரீவேணுகோபாலன் -  அம்மா
    25. ஜெயகாந்தன் -  நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
    26. ஜெயமோகன் - திசைகளின் நடுவே      27. ஜெயந்தன்  - மொட்டை
    28. ஜோதிர்லதா கிரிஜா -  மாப்பிள்ளை ஊரில் இல்லை
    29. எஸ் ஷங்கரநாராயணன் - அதோ பூமி
    30. ஸ்டெல்லா புரூஸ் -கடற்கரையை நோக்கி என்னுடைய நாட்கள்  

கரிசல் கதைகள் என்ற தொகுப்பை கி ராஜநாராயணன் தொகுத்து அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  முதல் பதிப்பு 1984 ல் வெளியானது. இத் தொகுப்பில் 21 கதைகள் உள்ளன.

      1. ச தமிழ்ச்செல்வன் - வெயிலோடு போய்   2. அ முத்தானந்தம்  -  மாடுகள்
      3. சோ தர்மன்    -  சருகுகள்               4.  கோணங்கி  -  பாழ்  
      5. திடவை பொன்னுச்சாமி - மிச்சம்      6. சுயம்புலிங்கம் -  மூளி மாடுகள்
      7. வே சதாசிவன்  -  மண் வெறி     8. அழ கிருஷ்ணமூர்த்தி  - பாஅ...வம்
      9. பொ அழகுகிருஷ்ணன் - ஒத்தை வீட்டுக்காரர் 
     10. ஜி காசிராஜன் -  மழைக்கஞ்சி 
     11.கே ராமசாமி -நெல்லுச்சோறு                         
     12. மேலாண்மை பொன்னுச்சாமி - உயிரைவிட
     13. பொன்ராஜா - வருகை    14. தனுஷ்கோடி ராமசாமி  - சரஸ்வதி பூஜை
     15. ரா அழகர்சாமி  - கொம்பூதிக்கிழவி  16. கௌரிசங்கர்  - கிரௌஞ்சவதம்
     17. வீரவேலுச்சாமி  - பங்கீடுகள்        18. பூமணி  -  ரீதி
     19. பா செயப்பிரகாசம் - தாலியில் பூச்சூடியவர்கள்
     20. கி ராஜநாராயணன் - நிலை நிறுத்தல்  21. கு அழகிரிசாமி  -  அழகம்மாள்


மும்பய் சிறுகதைகள் என்ற தொகுப்பை அன்பாதவன், மதியழகன் சுப்பையா இருவரும் தொகுத்து  ராஜம் வெளியீடாக 2009 ல் வெளிவந்துள்ளது. இதில் மும்பையை மையமாகக் கொண்ட கதைகள்  தொகுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கதைகள்.

      1. அம்பை   - பயணம் 6         2. நாஞ்சில் நாடன்  - மொகித்தே
      3. இந்திரன்  - ஒன்றும் ஒன்றும் பூஜ்ஜியம் 
      4. புதிய மாதவி  - திறந்திருக்கும் முதுகுகள் 
      5. புதிய மாதவி  -  காத்திருப்பு                      
      6. பாலபாரதி -  பொம்மை 
      7. பாலபாரதி  -  1993                                       
      8. கல்லை அன்சாரி - உடுக்கை  9. மும்பை கிங்பெல்  -  
       உறவுகள்                 
      10. மதியழகன் சுப்பையா - வெள்ளை நிறக்கைக்குட்டை
      11. சோலை சீனிவாசன் -  திருட்டு மொபைல்
      12. சோலை சீனிவாசன்  - மும்பை டு குஜராத்
      13. சங்கொலி பாலகிருஷ்ணன் - தீ 14. கே ஆர் ஸ்ரீனிவாசன்- பூமியெங்கும்
         மனிதம் 15. அன்பாதவன்  - கூடு
                        


இன்னும் நிறைய தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சில தொகுப்புக்களை  அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல தொகுப்புக்களை  மார்ச் 2015 இறுதியில் தான் என்னால் வாங்க முடிந்தது. முக்கியமாக கதைக்கோவை பலராலும்  குறிப்பிடப்பட்ட தொகுப்பு.
அது போல தலை வாழை, நந்தவனத்தெரு , காவ்யாவின் பல தொகுப்புக்கள்            ஆகியவற்றை மார்ச் இறுதியில் வாங்கினேன்.  அது போல இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம்  இரண்டு மார்ச் இறுதியில் தான் கிடைத்தது. மூன்றாம் பாகம்    
இன்னும் கிடைக்கவில்லை.  இந்த கட்டுரையில் 875 சிறுகதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன

( தொடரும் )

Email :- enselvaraju@gmail.com